செய்திகள் :

சரத் பவாரின் MPக்களுக்காக தேசியவாத காங்கிரஸை இணைக்க பாஜக முயற்சி; அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு

post image

மகாராஷ்டிராவில் மறைந்த துணை முதல்வர் அஜித்பவார் காலமான பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க சரத்பவார் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அஜித்பவார் உயிரோடு இருந்தபோதே தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளையும் ஒன்றாகச் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவர் திடீரென இறந்ததால் அத்திட்டம் பாதியில் நின்றது. இப்போது பா.ஜ.க-விற்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருக்கும் 8 எம்.பி.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

எனவே அஜித்பவார் மனைவி சுனேத்ராபவார் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணிகளை ஒன்றாக இணைக்க பா.ஜ.க முயன்று வருகிறது.

இது தொடர்பாக சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், பிரபுல் பட்டேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோர் ஒன்றாகச் சென்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசினர்.

சுனேத்ரா பவார், பார்த்பவார்
சுனேத்ரா பவார், பார்த்பவார்

இச்சந்திப்பின்போது இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனேத்ரா பவார், அவரது மகன் பார்த் பவாரிடம் சொல்லாமல் நடந்துள்ளது. இரு அணிகளின் இணைப்புக்கு பா.ஜ.கவும் இதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இரு அணிகளும் இணைந்தால் ஒவ்வொரு அணியிலும் தலா ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க தலைமை தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசிய பிறகு அஜித்பவார் மகன் பார்த்பவார் தனியாகச் சென்று தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது தங்களது கட்சியின் தலைவர்கள் உங்களுடன் என்ன தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று பார்த் பவார் கேட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தன்னுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்த்பவாரிடம் பகிர்ந்து கொள்ள தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக உங்களது தாயாரிடம் பேசிக்கொள்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பிவிட்டாராம்.

பார்த் பவார் ஆதிக்கம்

கட்சியில் பார்த் பவார் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அஜித்பவார் பவார் இறந்த பிறகு சரத்பவார் மீண்டும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இரு அணிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது பார்த் பவார் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காமல் இரு அணிகளும் ஒன்றாகச் சேர தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு

சரத்பவார் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க கூட்டணியில் சேரும் முடிவில் உறுதியாக இருக்கின்றனர். சரத்பவார் இவ்விவகாரத்தில் இன்னும் உறுதியான ஒரு முடிவை எடுக்காமல் இருக்கிறார்.

அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் ஒன்று சேருவதை அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் மற்றும் மகன் பார்த் பவார் விரும்பவில்லை என்று கட்சியின் இரண்டாக கட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்தால் சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலேயின் ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்று பயப்படுகின்றனர்.

எனவேதான் இரு அணிகளின் இணைப்புக்கு அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார் ஆகியோர் கட்சியின் அதிகாரத்தை குடும்பத்திற்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ள தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல் மற்றும் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே ஆகியோர், பவார் குடும்பத்தின் இந்த ஆதிக்கத்தால் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக உணர்கின்றனர். பா.ஜ.க கூட்டணி ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் பதவிக்கு பிரபுல் படேல் மற்றும் பார்த் பவார் ஆகிய இருவருமே போட்டியிடுகின்றனர்.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க