செய்திகள் :

சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

post image

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமாகியிருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92.

கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கியவர் இவர்.

ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன்

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1933-ம் ஆண்டு பிறந்த இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

1975 முதல் 1993 வரை அங்கு செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றினார்.

கடந்த 2004-ம் ஆண்டு 'வணக்கம் வள்ளுவ' என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

வானம்பாடி கவிதை இயக்கத்தில் முக்கியப் பங்களிப்புகளை இவர் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, 'அரிமா நோக்கு' என்ற ஆய்விதழில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன்

மேலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலும், அறிவியல் தமிழ் மன்றத்திலும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் செயலாற்றியிருக்கிறார்.

இவருடைய மறைவுக்கு இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சேலம்: புது பொலிவுடன் அரசு அருங்காட்சியகம்; என்ன ஸ்பெஷல், பார்க்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள் என்ன?

சேலம் மாவட்டம் மணக்காடு அருகில் ரூ.4.91 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்துடன் புது பொலிவில் மக்கள் பார்வைக்கு தயாராகி வருகிறது அரசு அருங்காட்சியகம் என்ற தகவலோடும், ஆர்வத்தோடும் என்ன நடக்கிறது அரசு அருங்க... மேலும் பார்க்க

அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா? - பேருந்தும் பாடல்களும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Vikatan Play: கலை கலைக்கானதா? மக்களுக்கானதா? எழுத்தாளர் இரா.முருகவேள் படைப்புகள் - ஆடியோ வடிவில்

“ தமிழ்ச்சூழலில் தான் கொண்ட பொதுவுடமை அரசியலை தன் களச்செயற்பாட்டில் மட்டுமின்றி படைப்பின் வழியிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் எழுத்தாளர் இரா.முருகவேள். அரசியல் செயற்பாட்டாளர், வழக்கறிஞர், மொழிப... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர் : கடந்து வந்த பாதை; பிரிவு 370 நீக்கம்... எதிர்காலம்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நித்தமும் நினைவில் சுமந்து கொண்டே இருந்த நிகழ்வு! - மனதிற்கு அரிய மருந்தான மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க