செய்திகள் :

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!

post image

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் சிறையில் 2023-ம் ஆண்டு அடைக்கப்பட்டிருந்தார். அப்போது 20-க்கும் மேற்பட்ட பி.பி மாத்திரைகளைச் சாப்பிட்டு தனசேகரன், தற்கொலைக்கு முயன்றார். இந்தச் சம்பவத்தில் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். ஜாமீனில் வெளியில் வந்த ரௌடி தனசேகரன், எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்தகாரர் ஒருவரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் மாமூல் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டில் தனசேகரனின் கூட்டாளிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஆனால் தனசேகரன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.

ரௌடி எண்ணூர் தனசேகரன்

இந்த நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். அவர், தலைமறைவாக உள்ள ரௌடிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த எண்ணூர் தனசேகரனை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், துப்பாக்கி முனையில் எண்ணூர் தனசேகரனை கைது செய்தனர். அப்போது தனசேகரன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் போலீஸார் சுதாரித்துக் கொண்டு தனசேகரனை மடக்கிப் பிடித்து காட்டூர் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடமிருந்து துப்பாக்கி, சொகுசு கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னைய... மேலும் பார்க்க

`தந்தை வேலை எனக்குத்தான்.!' - அரசு வேலை, சொத்துக்காக தாயை கூலிப்படை மூலம் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா தனது 45 வயது தாய் நீரஜ் சர்மாவை கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றத்திற்காக போலீஸார் கைது ச... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மனைவியைக் கொன்று காதலிக்கு போட்டோ அனுப்பிய இந்திய பொறியாளர் - 9 மாத நாடகம் முடிந்தது!

அமெரிக்க கனவு, காதல், திருமணம், துரோகம்... என ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் அத்தனை அம்சங்களும் அடங்கிய ஒரு கொடூர சம்பவம் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது திருமணம் மீறிய உறவு... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் சம்பந்தப்பட்ட பூட்டான் கார் கடத்தல் வழக்கு: மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

சர்வதேச கார் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதற்காக சுங்கத்துறை 'ஆபரேஷன் நும்கோர்' (Operation Numkhor) என்ற புலனாய்வு நடவடிக்கையைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரப்படுத்தி உள்ளது. சர்வதேச கும்பல், வரி செல... மேலும் பார்க்க

நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதி... மேலும் பார்க்க

சாத்தூர் : நடத்தையில் சந்தேகம்; கணவனின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் அட்டைப் பெட்டித் தயாரிப்பு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இ... மேலும் பார்க்க