செய்திகள் :

துல்கர் சல்மான் சம்பந்தப்பட்ட பூட்டான் கார் கடத்தல் வழக்கு: மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

post image

சர்வதேச கார் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதற்காக சுங்கத்துறை 'ஆபரேஷன் நும்கோர்' (Operation Numkhor) என்ற புலனாய்வு நடவடிக்கையைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரப்படுத்தி உள்ளது.

சர்வதேச கும்பல், வரி செலுத்தாமல் பூட்டானில் இருந்து இந்தியாவுக்குக் கடத்திவந்துள்ளது. கடத்தல் கும்பலிடம் இருந்து சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்கள் குறித்த இந்த விரிவான விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்களான துல்கர் சல்மான், அமித் சக்காலக்கல் உள்ளிட்ட பலரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்தக் கடத்தல் நெட்வொர்க் மூலம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே சுமார் 38 சொகுசு வாகனங்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

இந்த நிலையில் பூட்டானில் இருந்து வரி ஏய்ப்பு செய்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூருவில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு 'டொயோட்டா லேண்ட் குரூஸர்' (Toyota Land Cruiser) ரக ஆடம்பர கார்களை சுங்கத்துறை தடுப்புப் பிரிவு (Customs Preventive Unit) அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வாகனங்களை இந்தியாவில் சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள், போலியான பிரமாணப் பத்திரங்கள் மற்றும் போலி முகவரி சான்றுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கார்களின் உண்மையான உற்பத்தி மற்றும் இறக்குமதி பின்னணியை மறைப்பதற்காகத் திட்டமிட்ட முறையில் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்கள்

சர்வதேச கார் கடத்தல் கும்பல், பூட்டான் - மேற்கு வங்க எல்லையில் உள்ள 'புண்சோலிங்' (Phuntsholing) என்ற பகுதி வழியாகத்தான் ஆடம்பர கார்களை இந்தியாவிற்குள் கடத்தி வருகிறது. பூட்டான் நாட்டின் வழியாக கார்களைக் கொண்டு வரும்போது வரி விதிப்பில் உள்ள சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் முதலில் அஸ்ஸாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வாகனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

அதன் பின்னர், அங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கொண்டுவரப்பட்டு, பெரும் பணக்காரர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தப் பிரமாண்ட கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய அஸ்ஸாம் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஏஜென்ட்டுகள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் மனைவியைக் கொன்று காதலிக்கு போட்டோ அனுப்பிய இந்திய பொறியாளர் - 9 மாத நாடகம் முடிந்தது!

அமெரிக்க கனவு, காதல், திருமணம், துரோகம்... என ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் அத்தனை அம்சங்களும் அடங்கிய ஒரு கொடூர சம்பவம் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது திருமணம் மீறிய உறவு... மேலும் பார்க்க

நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதி... மேலும் பார்க்க

சாத்தூர் : நடத்தையில் சந்தேகம்; கணவனின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் அட்டைப் பெட்டித் தயாரிப்பு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இ... மேலும் பார்க்க

'ரூ.14 லட்சம் ரொக்கம்; 153 ஏ.டி.எம் கார்டுகள்; 52 செல்போன்கள்' - போலீஸாரை அதிர வைத்த கும்பல் கைது?

திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸார் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தீவிர சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

திருச்சி: பாழடைந்த கிணற்றில் இரு வாலிபர்களின் உடல்; தனியாக கிடந்த தலை; சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 அடி அகலம் 15 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த சில தினங்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால... மேலும் பார்க்க

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' - அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இத... மேலும் பார்க்க