செய்திகள் :

"ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?

post image

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கியிருக்கிறது.

சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக் காசு பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு விழாவை நேரில் சென்று பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டு ரசித்த மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்த வழிவகை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழே உயிரே! | உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! | மொழிப்போரின் வீர வரலாறு – 4

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 41965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருக்கும்’ என்ற சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அற... மேலும் பார்க்க

அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். EPSஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்... மேலும் பார்க்க

1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

கட்டுரையாளர்: கப்பிகுளம் ஜெ.பிரபாகர்அரசியல் ஆடுபுலி 1 - 1977 தேர்தல்2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்த... மேலும் பார்க்க

`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்

உறுமும் சிறுத்தைக் கட்சியினர்!தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்...வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.... மேலும் பார்க்க

10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நேற்று முன்தினம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்துள்ளது. மும்பையை எப... மேலும் பார்க்க