செய்திகள் :

நெல்லை: தங்கை முறையில் வரும் பெண் மீது காதல்; எதிர்த்த சித்தப்பா வெட்டிக் கொலை; என்ன நடந்தது?

post image

நெல்லை மாவட்டம், முக்கூடலை அடுத்த அடைச்சாணியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலையில் அடைச்சாணி அருகேயுள்ள பாலத்திற்குச் செல்லும் வழியில் சரவணன் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். அவரது உடல் அருகில் அரிவாள் ஒன்று கிடந்துள்ளது.

பாப்பாக்குடி காவல் நிலையம்
பாப்பாக்குடி காவல் நிலையம்

அப்பகுதி மக்கள் பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். அரிவாளைக் கைப்பற்றிய போலீஸார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த அரிவாள் யாருடையது என விசாரித்ததில், அதே பகுதியில் வசிக்கும் சரவணனின் மனைவியின் அக்கா மகன் பாலமுருகன் என்பவருடையது என போலீஸார் கண்டுபிடித்தனர். சந்தேகத்தின் பேரில் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், அவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் சரவணனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸாரின் விசாரணையில், ”தனக்கு தங்கை முறை வரும் சித்தப்பா சரவணனின் மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்தேன்.

பாப்பாக்குடி காவல் நிலையம்
பாப்பாக்குடி காவல் நிலையம்

சித்தப்பா மகளை எனக்கு திருமணம் முடித்துத் தருமாறு அவரிடம் கேட்டேன். இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மீண்டும் பெண் கேட்டேன். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்தேன்'' என்று பாலமுருகன் கூறி போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.

நெல்லை: பாஜக நிர்வாகியின் மாமியாரைக் கட்டிப்போட்டு நகை கொள்ளை; எச்சரிக்கும் போலீஸ்; என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவர், பா.ஜ.க மாவட்ட வர்த்தகப் பிரிவு அணியின் செயலாளராக உள்ளார். இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இதனால், ... மேலும் பார்க்க

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க