செய்திகள் :

டெலிகிராம் தடை: ``திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?" - சாடும் ராகுல் காந்தி!

post image

சமீபத்தில் நடந்த நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வுகளின் வினாத் தாள் கசிந்த விவகாரமும், அதனால் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரமும் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தது. இதையொட்டி, தேர்வு முறைகேடுகள் மற்றும் வதந்திகளைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து டெலிகிராம் செயலி நீக்கப்பட்டதுடன், இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் அதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ``வினாத்தாள் கசிவைத் தடுக்க மோடி அரசு கண்டுபிடித்துள்ள புதிய வித்தை தான் இந்த 'டெலிகிராம் தடை'. அதாவது, திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குப் பூட்டுப் போடுகிறார்கள்.

டெலிகிராம், வாட்ஸ்அப்

லட்சக்கணக்கான மாணவர்கள் பல ஆண்டுகளாக டெலிகிராம் மூலம் தங்களின் பாடக்குறிப்புகள் (Notes), மாதிரித் தேர்வுத் தொடர்கள், கலந்துரையாடல்கள் எனத் தேர்வுக்காகப் படித்து வருகிறார்கள். அவர்களின் அந்தப் படிப்பு வசதியைப் பறிப்பது எப்படி வினாத்தாள் கசிவுக்கு தீர்வாகும்?

இந்தத் தடை முழுமையானது அல்ல என்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தெரியும். வினாத்தாளைக் கசிய விடுபவர்களுக்கும் தெரியும். அப்படியிருக்க, அடுத்த தடை எதன் மீது? வாட்ஸ்அப் மீதா? தேர்வு நாளில் மாணவர்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவார்கள். கத்தரிக்கோலால் சட்டப் பைகள் வெட்டப்படும். விமானப்படை மூலம் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். இந்த நாடகங்களுக்குப் பஞ்சமிருக்காது.

ஆனால், நோயின் வேரை அழிக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏனெனில் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் இந்த அரசின் நிழலில் தான் செழித்து வளர்கிறார்கள். இளைஞர்களைக் கண்ணீர் சிந்த வைக்கிறார்கள். மோடி அவர்களே, இந்த நாடகங்களை நிறுத்துங்கள். மாணவர்களை அல்ல, மாஃபியாக்களைத் தாக்குங்கள். மாணவர்களின் குரலுக்குச் செவிசாய்க்காவிட்டால், நாட்டின் இளைஞர்களுக்குத் தங்களின் உரிமைகளைப் பறிக்க நன்றாகவே தெரியும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு - யார் அந்த மூவர்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை கட்சிக்குள் முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ... மேலும் பார்க்க

"தவெக அரசு இதை செய்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.!”- தங்கம் தென்னரசு சவால்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி தம்பதியினரின் மகன் ஆகாஷ் டெலிசன் (26), குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்குச் சென்றார்.அதையடுத்து ஆகாஷ் டெலிச... மேலும் பார்க்க

"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகன் திருமணத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் உள்ள... மேலும் பார்க்க

கோவை: மாமன்றத்திற்குள் போலீஸை அழைத்த மேயர்; உள்ளே வராத காவல்துறை! - பரபரத்த மாநகராட்சி கூட்டம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கோவை மாநகராட்சியின் முதல் மாதாந்திர கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கோவை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள், முதல்வர் விஜய் படத்துட... மேலும் பார்க்க

தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்கு அப்பாவு கேள்வி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காத த.வெ.க, ஆட்சி அமைக்க தி.மு.க கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்ட கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு வழங்கின. அதேநேர... மேலும் பார்க்க