செய்திகள் :

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

post image

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை.

அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர்.

அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் உக்ரம் தணித்தார்.

அவ்வாறு பிரபஞ்சத்தின் நடுக்கம் தீர்த்த பெருமானாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலமே திருபுவனம்.

மற்றுமொரு புராணத்தில் திரிபுரங்கள் எனப்படும் மூன்று அசுரக் கோட்டைகளை ஈசன் எரித்து அதனால் மக்களிடம் உண்டான நடுக்கத்தைப் போக்கியவர் என்பதாலும் இவருக்கு கம்பகரேஸ்வரர் அதாவது நடுக்கம் தீர்த்த பெருமான் என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.

திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில்
திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில்

கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது.

இங்கு அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறாள் அன்னை. அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.

இங்குள்ள கம்பகரேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. காண்பதற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் புராணகால சிறப்பு பெற்றது.

தமிழகத்தின் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம். வரகுண பாண்டியனுக்கு உண்டான தோஷம் நீங்கிய தலம் இந்தத் திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் ஆலயம்.

முன் வாசல் வழியே நுழைந்து ஈசனை வணங்கி, நடுக்கம் தீர்ந்தது மீண்டும் தோஷமும் நடுக்கமும் பீடிக்காத வகையில் பின்வாசல் வழியே சென்றான் என்கிறது தலபுராணம். இன்றும் அவ்வாறே நோயுற்றவர்கள் ஈசனை வழிபட்டுத் திரும்பிச் செல்கின்றனர்.

திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில்
திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில்

நாட்டிய கரண சிற்பங்கள், மனுநீதிச் சோழன் வரலாறு, போர்க்களக் காட்சிகள், தலைக்கோலி பட்டம் பெற்ற பெண் சிற்பம், யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமான் பெருமானும் செல்லும் சிற்பம் என இந்த ஆலயம் முழுக்கவே அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஏழு நிலைகள் கொண்ட பிரமாண்ட கோபுரம், சச்சிதானந்த விமானம் கொண்ட கருவறை, மண்டபங்கள், எண்ணற்ற சந்நிதிகள் என ஆலயம் பரந்து விரிந்துள்ளது.

ஆலயக் கருவறை உயர்ந்த தளத்தில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் கொண்டுள்ளது. கருவறை சந்நிதி, யானை இழுத்துச் செல்வது போன்ற ரத அமைப்புடன் அமைந்திருக்கிறது.

இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி வேறெங்கும் காண முடியாத பிரமாண்டமும் அழகும் கொண்டது. ஏழரை அடி உயரம் கொண்டு அச்சமூட்டும் வகையில் சரபர் காட்சி அளிக்கிறார். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர்.

ஞாயிறு ராகு காலத்தில் 11 வாரங்கள் தொடர்ச்சியாக 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து சரபேஸ்வரரை வணங்கினால் எல்லாவித அச்சங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும். தீய சக்திகளின் பிரச்னைகள், சத்ரு பயம், வழக்குப் பிரச்னைகள் எல்லாம் விலகி வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

சரபேஸ்வரர்
சரபேஸ்வரர்

இங்கு வந்து ஈசனையும் சரபேஸ்வரரையும் வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்: மனப்பிரச்னைகளைத் தீர்க்கும் ஊஞ்சல் உற்சவம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில். சுற்றியிருக்கும் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தாயாக இருந்து காக்கும் இந்த அம்பிக... மேலும் பார்க்க

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள். அப... மேலும் பார்க்க

வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி.மலைகள் சூழ்ந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயில் பெயரில் மோசடி; பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை;பின்னணி என்ன?

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்த... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்ம... மேலும் பார்க்க