செய்திகள் :

'தந்தைக்கே துரோகம் செய்த கொம்பனுக்கா ஓட்டு?' - அதிமுகவுடனான கூட்டணியை நிராகரித்த ராமதாஸ்

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று(07-01-2026) சந்தித்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி.

ஆனால், இன்னொரு பக்கம், பாமக நிறுவனர் ராமதாஸ் அந்தக் கூட்டணியை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தச் சூழலில், இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அவர் பேசியுள்ளதாவது...

"நேற்று ஒரு நபர் (அன்புமணி) ஒரு கட்சியுடன் கூட்டணி என ஒப்பந்தமோ... கையெழுத்தோ போட்டிருக்கிறார்.

நான் செய்த சத்தியத்தை மீறி அவரை கட்சியில் சேர்த்தேன்... மத்திய அமைச்சர் ஆக்கினேன். அப்போது அவன் எனக்கே வேட்டு வைப்பான் என்று தெரியவில்லை.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

ஆனால், அவர் செய்த தில்லுமுல்லுகள் தெரிந்த பின், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வைத்த வாதத்தின் படியும், தீர்ப்பின் படியும் அன்புமணி பாமகவில் இல்லை.

என்னிடம் தான் கட்சி உள்ளது என்பதற்கான ஆதாரம் - நடந்த செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக்குழு ஆகியவற்றிற்கு ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.

பாமகவின் தொண்டர்கள் என்னிடம் தான் உள்ளனர். சில நபர்கள் மட்டும் பணத்திற்காக அவருடன் இருக்கிறார்கள்.

அன்புமணி யாரை எங்கு நிறுத்தினாலும், பாமகவினருடன், மக்களும் அவர்களுக்கு ஓட்டு போடமாட்டார்கள்.

காரணம், 'தந்தைக்கே துரோகம் செய்த கொம்பனுக்கா ஓட்டு போடுவது?' என்று யோசிப்பார்கள்.

அன்புமணி பாமக சார்பாக கூட்டணி பேசுவது நேற்று நடந்த கூத்து. அது நீதிமன்ற அவமதிப்பு.

என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கும்... சேரும்... இருக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்". என்றார்.

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க