செய்திகள் :

`தற்கொலையை ஆணவக் கொலையாக திரித்துக் கூறி சிலர் ஆதாயம் தேட முயல்கிறார்கள்!' - அன்புமணி ராமதாஸ்

post image

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீவிரமாக களமாடி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நேற்று சேலத்தில் செய்தியாளரைச் சந்தித்து பேசுகையில், "‌மயிலாடுதுறை சாத்தங்குடி‌ கிராமத்தில் நடந்த காதலர்கள் தற்கொலை சம்பவத்தை சிலர்‌‌ ஆணவக் கொலை‌ என திரித்துக் கூறுவது சரியானது அல்ல.‌ கொலையாக இருந்தாலும்‌ தற்கொலையாக இருந்தாலும்‌ ஆணவக் கொலையாக இருந்தாலும் அது தவறுதான்.‌ தற்கொலையை ஆணவக் கொலையாக திரிப்பது தவறான செயல்.‌ இந்த விவகாரத்தில்‌ பதற்றமானச் சூழலை உருவாக்கி, ஒரு சில அமைப்புகள் ஆதாயமடைய முயல்கின்றன. பொறுப்பில் இருக்கும் சில தலைவர்கள்‌ தவறான செய்திகளை பரப்புவது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக் கூடாது.

அன்புமணி

மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ நடுவர் மன்ற தீர்பையோ கர்நாடக அரசு மதிப்பதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் யானை பேரம், குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.

அனைத்து கட்சிகளையும் கூட்டி, மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

"திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை" - மு.வீரபாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 'மார்க்ஸ் மாமணி விருது' விருதை பெற்றார். அதன் பிறகு, அந்த விழாவ... மேலும் பார்க்க

"திமுகவே எங்களுடன் உறவில்லை என்று அறிவித்தது; அந்த நட்பை நான் சிதைக்கவில்லை" - திருமாவளவன்

நேற்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது..."திமுக கூட்டணியில் இருந்தபோது, அப்போதைய முதலமைச்... மேலும் பார்க்க

வெளிநாட்டிற்கு தப்பிவிடக் கூடாது - செந்தில் பாலாஜிக்கு 'Look out Notice': தவெக ஆட்சியை கவிழ்க்க சதி? | Live Updates

செந்தில் பாலாஜிக்கு 'Look out Notice'தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடிக்கு பேரம் பேசியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனுவை அளித்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ டாக்... மேலும் பார்க்க

`வாய்ப்பு கிடைக்கும் இடத்துக்கெல்லாம் ஓடியவர்தான் ஆதவ் அர்ஜுனா; இனியும் அவர்...' - கே.பி.முனுசாமி

"தவெகவுடன் அதிமுக இணையும் என்று இனியும் பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார். கே.பி.முனுசாமிஅதிமுக முன்னாள் அமைச... மேலும் பார்க்க

மேகதாது: டெல்டா விவசாயிகள் அச்சத்தைப் போக்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! - அன்புமணி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டி விடுமோ? எ... மேலும் பார்க்க