செய்திகள் :

``தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான்" - எச்சரிக்கும் ராஜேந்திர பாலாஜி

post image

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``உலகத் தலைவர்கள் அனைவரும் போற்றும் வகையில் ஒரு மிகச் சிறந்த பிரதமராக மோடி திகழ்கிறார். அவருக்கு இணையான ஒரு தலைவரோ, அவர் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்நோக்கும் துணிச்சலோ இந்தியாவில் உள்ள வேறு எந்தக் கட்சியின் தலைவருக்கும் கிடையாது.

அமெரிக்க அதிபர் போன்ற வல்லரசுத் தலைவர்களும் அவருடன் கலந்துபேச விரும்பும் வகையில், வலுவான கூட்டணியோடு உலகளவில் வியக்கத்தக்க ஆட்சியை அவர் வழங்கி வருகிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் தங்கள் தலைவரை முதலமைச்சராகவோ, பிரதமராகவோ அல்லது குடியரசுத் தலைவராகவோ கற்பனை செய்து பார்ப்பது வழக்கம். அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

அடுத்து பிரதமர் என்றும் கற்பனை செய்கிறார்கள். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு எத்தனை படிகளைக் கடக்க வேண்டும், எத்தனை சிக்கல்களைச் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை உண்மைகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தவெக மற்றும் காங்கிரஸ் இடையே அமைந்திருக்கும் கூட்டணி என்பது பொருத்தமில்லாத, ‘மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போன்ற’ ஒரு கூட்டணியாகும். இந்த ஆட்சி சூழ்நிலையால் உருவானதே தவிர, தனிப் பெரும்பான்மையுடன் அமைந்த நிலையான ஆட்சி கிடையாது.

எனவே, பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்திருக்கும் இந்த ஆட்சி மற்றும் கூட்டணி எந்த நேரத்திலும் கவிழ்ந்துவிடக்கூடும் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான்" என்றார்.

MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதிக்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று (செப்.5) நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தொகுதி எம்.பி.யும் நடிக... மேலும் பார்க்க

```திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" - என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" - ஸ்டாலின்

நடப்பு சட்டமன்றத் தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" - செக்கோவ்வின் வரிகளை நினைவூட்டிய சிந்தனைச் செல்வன்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் ... மேலும் பார்க்க

"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம்

சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் நிர்மல் குமார்

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை... மேலும் பார்க்க