செய்திகள் :

'திமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கரா?' - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?

post image

மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது பட்ஜெட்டில் திமுகவின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஓட்டுகிறது என்ற விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்
பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்

அரசு சார்பிலான திட்டங்கள் 70-80 ஆண்டுகளாக இருக்கும் திட்டங்கள்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் செய்வதுபோல்தான் இந்த நிதிநிலை அறிக்கையில் செய்துள்ளோம்.

புதிய நிதி ஆதாரங்களைச் சீரமைக்கும் பணிகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 உயர்த்தப்படுவது எப்போது என்ற கேள்விக்கு, "நிதி ஆதாரத்தைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், "உங்களுக்கே தெரியும் தமிழக நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று... மின்சார வாரியம், ஆவின், போக்குவரத்துத் துறை என எல்லாத்தையும் மூடும் அளவிற்குத்தான் கடந்த ஆட்சி விட்டு சென்றிருக்கிறது.

தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக வேளாண் பட்ஜெட்

நேற்று எடப்பாடி சொல்கிறார், புதிய ஆதாரத்தைப் பெருக்குவதற்கு பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை என்கிறார். அவர்கள் ஆட்சியில் அப்படி என்ன செய்தார்கள்.

நிதி ஆதாரத்தைப் பெருக்க திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

'என்னப்பா சொல்ல மாட்டீங்களா...' - உதயநிதியின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை நிகழ்வுகளை முடித்து விட்டு கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் ஏற முயன்றா... மேலும் பார்க்க

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ட்ரம்ப் விதித்த வரியை Refund செய்த அமெரிக்கா; எவ்வளவு தெரியுமா?

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று - பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 'பரஸ்பர வரி'. இந்த வரியை அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருள... மேலும் பார்க்க

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்; சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச... மேலும் பார்க்க

”விவசாயிகளை ஏமாற்றிய வறண்ட வெற்று வேளாண் பட்ஜெட் இது” - தவெக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்

பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தண்ணீர் இல்லாததால் காவிரி திறக்கப்படாமல் வறண்டு கிடக்கிறது. எனவே டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album

கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப... மேலும் பார்க்க

Agri Budget: ``ஸ்டிக்கர் பட்ஜெட்: '-0' மதிப்பெண்தான் கொடுக்க முடியும்" - எடப்பாடி பழனிசாமி

இன்று சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட்டது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பா... மேலும் பார்க்க