செய்திகள் :

"திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - ஜி.கே.வாசன் ஆருடம்

post image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் முறையாக இயங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொள்முதல் நிலையங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு வென்றதாகச் சரித்திரம் கிடையாது. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக தி.மு.க கூறும் கருத்துக்களை வாக்காளர்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தி.மு.க, தோல்வி பயம் காரணமாகத்தான் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கின்றனர். பீகாரில் என்.டி.ஏ ஆட்சி மீண்டும் மலர பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

தமிழக சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாகவே உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். காரணம், போதைப்பொருள்தான். போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிகார வர்க்கத்திற்குப் பயந்துதான் தி.மு.க கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. தேர்தல் பயத்தின் காரணமாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

வெற்றி பெறும் மாநிலத்திற்கு ஒரு சட்டம், தோல்வி அடையும் மாநிலத்திற்கு ஒரு சட்டம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அது, நடக்காது. பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் தான் கூறின.

தேர்தல் ஆணையம் கூறவில்லை. பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் வெற்றி பெற வியூகத்தை வகுத்து வருகிறார்கள்.

தி.மு.க-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தற்போதைய சூழலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது" என்றார்.

கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்... மேலும் பார்க்க

'பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது' - திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து... மேலும் பார்க்க

83 ஆண்டு கால கனவு: `ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் பாதை’ ; ரயில் சத்தம் எப்போது கேட்கும்?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் சுமார் 83 ஆண்டு கால கோரிக்கையான ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தத் திட்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கரின் பகீர் முடிவு; காவல்துறை விசாரணை

தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் என்பவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.தமிழக காங்கிரஸ் கமிட்டி... மேலும் பார்க்க

SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடங்குகிறது.இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை திமுக தொடங்கி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற க... மேலும் பார்க்க