செய்திகள் :

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' - லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

post image

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் சாதாரண ஊழியராகச் சேர்ந்து தற்போது இணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் லோகநாதம்.

ஆன்மிக மக்களை அதிர்ச்சி அடையச் செய்த திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரத்தில் விசாரணை நடத்திய சி.பி.ஐ, மத்திய, மாநில அரசுகளுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், ''கலப்பட நெய் வழக்கில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி சில தேவஸ்தான அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது'' என்று தெரிவித்திருந்தது.

லோகநாதம்

இதனைத் தொடர்ந்து அவ்வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த அனில்குமார் சிங்கால் ஏற்கனவே அப்பதவியிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோயிலின் இணை நிர்வாக அதிகாரியான லோகநாதத்தின் வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

நடத்தப்பட்ட சோதனையில், ரூ 5 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்கள், 2 கிலோ தங்க ஆபரணங்கள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் லோகநாதம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தில் சாதாரண ஊழியராகப் பணிக்குச் சேர்ந்து, கடந்த ஆட்சியில் விரைந்து துணை நிர்வாக அதிகாரியாக உயர் பதவிக்குச் சென்றுள்ளார்.

அது மட்டுமின்றி அவருடைய ஊதியத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை தொடர்ந்து விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தற்போது சோதனை நடத்தி லோகநாதத்தைக் கைது செய்துள்ளனர். இன்னும் சில அதிகாரிகள் கைதாவார்கள் என்று சொல்லப்படுகிறது. .

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்த... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்க... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்; சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார். அந்... மேலும் பார்க்க

நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவரது வீட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் மோசடி; எப்.பி.ஐயால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி பஞ்சாப்பில் கைது

பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது போன்று அமெரிக்காவில்... மேலும் பார்க்க

போலி வங்கிக் கணக்குகளை வைத்து 15 நாளில் ரூ.9 கோடி மோசடி; கல்லூரி மாணவர்களைக் குறிவைக்கும் கும்பல்

சைபர் மோசடி கும்பல் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் மோசடி மூலம் பெறும் பணத்தை வங்கிக் கணக்கில் பெற அப்பாவிகளின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். அப்பாவி மக்க... மேலும் பார்க்க