செய்திகள் :

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்திருக்கவில்லை.

எனவே சமையல் செய்யும்படி தனது மனைவியிடம் கிருஷ்ணா கேட்டுக்கொண்டார். ஆனால் யாமினி டான்ஸ் கிளாஸுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். எனவே எனக்கு டான்ஸ் கிளாஸ் போகவேண்டும் என்றும், இப்போது சமையல் செய்ய நேரமில்லை என்றும் யாமினி தெரிவித்தார்.

ஏற்கனவே கிருஷ்ணா மது போதையில் இருந்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கிருஷ்ணா தனது மனைவியைச் சரமாறியாக அடித்து உதைத்தார்.

இரண்டு குழந்தைகள் முன்னிலையில் அவர் யாமினியை கழுத்து மற்றும் அடி வயிற்றில் அடித்து உதைத்தார். இத்தாக்குதலுக்குப் பிறகு கழுத்து மற்றும் வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி தனது கணவரிடம் சொல்லி மருந்து வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டார் யாமினி.

ஆனால் மருந்து வாங்க சென்ற கிருஷ்ணா மருந்து எதுவும் வாங்காமல் வந்தார். அதற்குள் யாமினியின் அடி வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. உடனே அவரை கிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் யாமினி இறந்து போனார்.

இதையடுத்து யாமினியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்ததில் யாமினிக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதோடு அடிவயிற்றில் குடல் சேதம் அடைந்து இருந்தது.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணாவிடம் விசாரித்து பின்னர் அவரைக் கைது செய்தனர்.

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்க... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்; சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார். அந்... மேலும் பார்க்க

நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவரது வீட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் மோசடி; எப்.பி.ஐயால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி பஞ்சாப்பில் கைது

பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது போன்று அமெரிக்காவில்... மேலும் பார்க்க

போலி வங்கிக் கணக்குகளை வைத்து 15 நாளில் ரூ.9 கோடி மோசடி; கல்லூரி மாணவர்களைக் குறிவைக்கும் கும்பல்

சைபர் மோசடி கும்பல் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் மோசடி மூலம் பெறும் பணத்தை வங்கிக் கணக்கில் பெற அப்பாவிகளின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். அப்பாவி மக்க... மேலும் பார்க்க

மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்? என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க