செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்!

post image

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சர்ச்சை குறித்து ட்வீட் செய்துள்ள பவன் கல்யாண், "திருப்பரங்குன்றம் முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானது. இந்து மரபுகள், சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களின் வழக்கமாகிவிட்டது. இந்துக்கள் தங்களது நம்பிக்கையை பின்பற்ற நீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பது வருத்தத்துக்குரிய நிலை.

தீர்க்கமான சட்டப் போராட்டத்திற்கு பிறகும் தீபமேற்றும் சடங்கை சொந்த நாட்டில் செய்ய முடியவில்லை. சாதி, பிராந்தியம், மொழியால் பிளவுபட்டுள்ளவரை இந்துக்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் இருக்கும். ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

`100 பில்லியன் டாலர் டார்கெட்; மேக்இன் இந்தியா; புதிய வர்த்தக வழித்தடங்கள்'- புதின் விசிட் ஹைலைட்ஸ்

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.அவரின் வருகையைத் தொ... மேலும் பார்க்க

Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், 'டிசம்பர் 5 மிகக் கடுமையான நாள்' என்று கு... மேலும் பார்க்க

Putin: "காந்தி உலகம் முழுமைக்குமான சிந்தனையாளர்" - புதின் கைப்பட எழுதிய குறிப்பு!

23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வருகையின்போது ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு மர... மேலும் பார்க்க

``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன!" - மோடி

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.அவரின் வருகையைத் தொ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை" - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்!

தமிழகமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூடாகிப் போயிருந்த நேரத்தில், திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை.... மேலும் பார்க்க