செய்திகள் :

திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது?

post image

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்குக் கிளம்பிச்சென்றது.

இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகாலை 5 மணிக்குச் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பி-1 பெட்டியில் திடீரெனப் புகை வந்தது. அதனைத் தொடர்ந்து ரயில் பெட்டி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனைக் கவனித்த கார்டு உடனே மோட்டார்மெனைத் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. உடனடியாக தீப்பிடித்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அதோடு தீ மற்ற பெட்டிகளுக்குப் பரவாமல் இருக்க தீப்பிடித்த ரயில் பெட்டி ரயிலில் இருந்து கழற்றிவிடப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினரும், இதர ரயில்வே ஊழியர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் விக்ரம்கர் என்ற ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்தது. கோடாவில் இருந்து ரயில்வே மீட்புக் குழுவினர் விரைந்து வந்து தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தனர். அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தீப்பிடித்த பெட்டியில் 68 பயணிகள் இருந்தனர். தீப்பற்றிய பெட்டி கொழுந்துவிட்டு எரிந்த காட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகப் பரவியது. அதோடு ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்ற மரத்திற்கும் தீ பரவியது. தீவிபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் ரயிலின் வேறு பெட்டிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தால் இரண்டு மணி நேரம் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட ரயில் கோடா ரயில் நிலையத்திற்குச் சென்ற பிறகு அங்கு கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு அனைத்து பயணிகளுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது.

பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்த... மேலும் பார்க்க

ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலைய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோய... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கார் மீது லாரி மோதி கோர விபத்து; 4 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோர் உடன் ஒரு காரில் பொள்ளாச்சி பகுதிக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ரீல்ஸ் மோகம்... குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 4 மைனர் சிறார்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள கோலாப்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அருகில் இருக்கும் தத்கேதா பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றனர். அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சி... மேலும் பார்க்க

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்து; சரத்பவார் மகள் சுப்ரியாவைக் காப்பாற்றிய சீட்பெல்ட்

முன்னாள் மத்திய அமைச்சர் மகளும், பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே புனேயில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். புனே-மும்பை நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே வழித்தடத்த... மேலும் பார்க்க