செய்திகள் :

பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!

post image

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்து ஊருக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது, டூவீலர் திருட்டு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார் விபத்து

தன்னைப்பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி தன்னுடையச் சொந்த ஊரைச் சேர்ந்த டென்னிஸ்ராஜ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு தளபதி கொலை செய்த சம்பவம் பலரையும் நடுங்கச் செய்தது. இந்நிலையில், தளபதி தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த தமிழரசன்(27), நிதீஷ்(25), சுதர்சன்(21), நரேன்(18), அபினேஷ் (21) ஆகிய ஆறு பேரும் ஒரே காரில் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு திருவையாறு பகுதிக்கு சென்றுள்ளனர்.

தளபதி பிறந்தநாள் கொண்டாட்டமாக மது விருந்து பார்ட்டி வைத்துள்ளார். அப்போது 6 பேரும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் திருவையாறில் இருந்து தளபதி உட்பட 6 பேரும் ஒரே காரில் அம்மன்பேட்டைக்கு திரும்பியுள்ளனர். காரை தமிழரசன் ஓட்டியுள்ளார். மது போதையில் இருந்ததால் காரை அதி வேகமாக ஓட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கண்டியூர் அருகே சுற்று குளத்தான்கரை பகுதியில் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் கார் வேகமாக மோதியுள்ளது.

ரெளடி தளபதி

இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன் தளபதி மற்றும் தமிழரசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காருக்குள் இருந்த மற்ற 4 பேரும் படுகாயமடைந்த நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நடுக்காவேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ரெளடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலைய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோய... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கார் மீது லாரி மோதி கோர விபத்து; 4 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோர் உடன் ஒரு காரில் பொள்ளாச்சி பகுதிக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ரீல்ஸ் மோகம்... குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 4 மைனர் சிறார்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள கோலாப்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அருகில் இருக்கும் தத்கேதா பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றனர். அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சி... மேலும் பார்க்க

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்து; சரத்பவார் மகள் சுப்ரியாவைக் காப்பாற்றிய சீட்பெல்ட்

முன்னாள் மத்திய அமைச்சர் மகளும், பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே புனேயில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். புனே-மும்பை நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே வழித்தடத்த... மேலும் பார்க்க

டெல்லி: 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து; 9 பேர் பலி; 5 பேரைக் காணவில்லை; ஏ.சி வெடித்ததுதான் காரணமா?

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள விவேக் விகார் பகுதியில், இன்று அதிகாலை 4 மணிக்கு நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. கட்டிடத்தின் 2வது மாடியில் பற்ற... மேலும் பார்க்க