செய்திகள் :

தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சுமன் சிங் மனைவி ரேனு தேவிக்கு, மாலதி தேவி என்ற பெண்ணுடன் தன்பாலின உறவு இருந்தது தெரிய வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உறவு நீடித்து வந்தது. மாலதி தேவி எப்போதும் தனது தோழி ரேனு வீட்டில்தான் இருப்பார். இருவருக்கும் இடையே தன்பாலின உறவு இருப்பது குறித்து தெரிந்தவுடன் சுமன் சிங் குடும்பத்தினர் மாலதி தங்களது வீட்டிற்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் மாலதியும், ரேனுவும் சேர்ந்து வாழ முடிவு செய்திருந்தனர். இதற்கு ரேனுவின் கணவன் தடையாக இருந்தார். இதையடுத்து சுமன் சிங்கை கொலை செய்ய ரேனுவும், மாலதியும் சேர்ந்து முடிவு செய்தனர்.

இதற்காக ஜிதேந்திரா குப்தா என்பவரை மாலதி தொடர்பு கொண்டு சுமன் சிங்கை கொலை செய்ய பேரம் பேசினார். ரூ.60 ஆயிரத்திற்கு சுமன் சிங்கை கொலை செய்ய ஜிதேந்திரா குப்தா ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று சுமன் சிங் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது அவரை ஜிதேந்திராவும், அவரது கூட்டாளிகள் ராஜு மற்றும் ராம்பிரகாஷ் ஆகியோர் தனியாக தோட்டத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் தோட்டத்தில் வைத்து சுமன் சிங்கை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துள்ளனர். அதோடு கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு உடலை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இக்கொலை தொடர்பாக போலீஸார் ரேனு மற்றும் மாலதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இக்கொலையில் தொடர்பு இருப்பதை ரேனு ஒப்புக்கொண்டார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜிதேந்திரா தலைமறைவாகிவிட்டார். அவரது கூட்டாளி ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பேரிடமிருந்து மொபைல் போன்கள் மற்றும் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய கயிறு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாலதிக்கு இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோத... மேலும் பார்க்க

`தினமும் முட்டைகறியா?' எனக் கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது

கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் சண்டை வருவதுண்டு. ஆனால் அந்த சண்டை அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகி ஒரு ஆண்டில் குழம்பு குறித்து கேள்வி எழுப... மேலும் பார்க்க

கரூர்: மதுபோதையில் பேருந்தை இயக்கிய டிரைவர்; குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் விஜயகுமார் (வயது 30). இவர், நாமக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையலராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆக... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!

தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: உள்ளாடைக்குள் ஸ்பெஷல் பாக்கெட்; சூப்பர் மார்க்கெட்களில் கைவரிசை காட்டும் பெண்கள் சிக்கினர்

சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் அனில் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``19.01.2026-ம் தேதி வாடிக்கையாளர்கள் போல... மேலும் பார்க்க

விழுப்புரம்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ-யால் மகளுக்கு ஏற்பட்ட சோகம் - கதறிய கணவன்; கத்தியுடன் சிக்கிய தந்தை

தெருவை உலுக்கிய அலறல் சத்தம்விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகள் சுமலதாவுக்கு திருமணமாகி ஏழு வயதில... மேலும் பார்க்க