செய்திகள் :

நகராமல் அடம்பிடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னைக்கு 'ரெட் அலர்ட்'! - எப்போது வரை?

post image

டிட்வா புயலின் எச்சமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் இருந்து வருகிறது.

கடந்த 6 மணிநேரத்தில், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல், அதே இடத்தில் நீடித்து வருகிறது.

இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்கும் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் தென்மேற்கு திசையில் மெதுவாக நகரலாம். அடுத்த 12 மணிநேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மழை
மழை
சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, இன்று காலை 10 மணி வரை...

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இங்கே 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

மழையை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வெளுத்து வாங்கிய கனமழை; நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தூரத்தில் நீண்டநேரம் நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் குறிப்பாக சென்னையில் கடந்த 10 மணி நேரத்த... மேலும் பார்க்க

சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை - புயல் இப்போது எங்கே இருக்கிறது?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரணம் என்ன? டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கர... மேலும் பார்க்க

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்

வங்கக் கடலுக்கு தென்மேற்கு திசையிலும், வட தமிழ்நாடு (சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்), புதுச்சேரி கடற்கரைக்கு அருகேயும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது டிட்வா புயலின் மீதமுள்ள பகுதி ஆ... மேலும் பார்க்க

Rain Update: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? Cyclone Ditwah Update

டிட்வா புயல் வட தமிழக கடற்கரையோர பகுதியில் கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் சிகப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். சென்... மேலும் பார்க்க

Ditwah: டிட்வா புயல் எங்கே இருக்கிறது? எப்போது தமிழ்நாட்டிற்கு வருகிறது? |Rain Update | Live News

நாளை (நவம்பர் 30, 2025) தமிழ்நாட்டில் 'Red Alert' எங்கே? தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்... ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம். இந்தப்... மேலும் பார்க்க

Rain alert: டிட்வா புயல்; தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்கள்; எங்கெல்லாம் விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை அந்நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இலங்கையில் ஏற்பட்டிர... மேலும் பார்க்க