செய்திகள் :

``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்

post image

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், `` நான் ஒரு பிரபலமாக இருப்பதால் எப்போதும் கவனமாக இருக்கிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வர்டை மாற்றுகிறேன். அதேபோல, எனது வீட்டின் வைஃபை (WiFi) கடவுச்சொல்லை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிடுவேன். நான் போன் வைத்திருக்கிறேன், ஆனால் அதை யார் ஹேக் செய்து விடுவார்களோ என்ற பயம் எப்போதும் எனக்கு இருக்கும். மேலும் எனது போனில் புகைப்படங்களைச் சேமித்து வைப்பதில்லை.

Nagarjuna - நாகர்ஜுனா
Nagarjuna - நாகர்ஜுனா

நான் உண்மையில் என் போனில் புகைப்படங்கள், செல்ஃபி கூட எடுப்பதில்லை. ஆனால், அப்பாவி முதியவர்களுக்கு சைபர் மோசடியாளர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வங்கி அதிகாரி போல நடித்த ஒருவர், பங்குகளிலும் ஈக்விட்டிகளிலும் முதலீடு செய்யச் சொல்லி நம்பவைக்க முயன்றார்.

எனது உறவினர் ஒருவர் வீட்டிலேயே சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்ட அனுபவமும் இருக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரி போல் நடித்த நபர், ஈரான் நாட்டிற்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நல்வாய்ப்பாக, உறவினர் சைபர் கிரைம் துறையைத் தொடர்பு கொண்டு அந்த மோசடியில் இருந்து தப்பித்தார்." என்றார்.

``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இ... மேலும் பார்க்க

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரு... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்த... மேலும் பார்க்க

Yash: ``எனக்கு பேய் படம்னா பயம், பார்க்கமாட்டேன்" - திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல டாக்!

KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான 'ராமாயணம்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங... மேலும் பார்க்க

Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எனது ரசிகர்கள் மற்றும் எ... மேலும் பார்க்க

கோவையில் நடிகர் ராம் சரணுக்கு நடந்த அறுவை சிகிச்சை; டிஸ்சார்ஜ் எப்போது?

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த, 'பெத்தி' என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில... மேலும் பார்க்க