செய்திகள் :

நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை' முடியுங்கள்

post image

கடந்த செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையா? தாக்கல் செய்திருந்தும் ஏதேனும் தவறு இருக்கிறதா? நாளையே (டிசம்பர் 31) கடைசி தேதி.

ஆம்... 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய மிஸ் செய்திருந்தாலோ, அதை இப்போது செய்யலாம். ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பதில் தவறு ஏதேனும் இருந்தால், இப்போது திருத்திக் கொள்ளலாம்.

நாளையும் தவறவிட்டுவிட்டால், இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கலை இனி செய்யவே முடியாது.

வருமான வரி ரீ-ஃபண்ட்
வருமான வரி ரீ-ஃபண்ட்

நாளைக்குப் பிறகு...

வரும் ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு, அப்டேட்டட் வருமான வரி கணக்குத் தாக்கலைத் தான் செய்ய முடியும்.

தாக்கல் செய்ய தாமதத்திற்கு ஏற்றவாறு மொத்த வரிக்கு 25 சதவிகிதம், 50 சதவிகிதம், 60 சதவிகிதம், 70 சதவிகிதம் அதிக வரி வசூலிக்கப்படும்.

திருத்தப்பட்ட வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு அபராதம் இல்லை. ஆனால், தாமதமாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதாக இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும்.

ரீஃபண்ட் வரவில்லையா?

இன்னும் நிறைய பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் வரவில்லை. வருமான வரி கணக்குத் தாக்கலின் போது, அவர்கள் நிரப்பாமல் விட்டவைகளும், தவறாக நிரப்பப்பட்டவைகளும் தான் இதற்கு காரணம்.

அதனால், அவர்கள் இன்றே ரீஃபண்ட் ஏன் இன்னும் வரவில்லை என்பதை செக் செய்து, அதை இன்றோ, நாளையோ சரி செய்துவிடுவது நல்லது.

நாளை தான் கடைசி நாள் என்று நாளை வரை காத்திருக்காமல், இன்றே வேலையை முடித்துவிடுங்கள். கடைசி நாள் என்பதால் வலைதளம் பிஸி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆண்டு வெள்ளியின் விலை வழக்கத்தை விட மிக மிக அதிக வளர்ச்சியை அடைந்தது. சொல்லப்போனால், தங்கத்தை விட, அதிக வளர்ச்சியைக் கண்டது. இந்தச் சூழலில், நேற்று சர்வதேச சந்தையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது ... மேலும் பார்க்க

உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!

வழக்கத்தை விட, இந்த ஆண்டு தங்கம், வெள்ளி அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதுவும் வெள்ளியின் வளர்ச்சியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த ஆண்டு முதல் தேதியில் ஒரு கிராமுக்கு ரூ.98 என விற்பனை ஆன வெள்... மேலும் பார்க்க

கடன் பிரச்னையில் மூழ்கக் கூடாதா? - '25%' ஃபார்முலாவை கையிலெடுங்க; உடனே விழித்திடங்க மக்களே!

இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம். அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம்.தேவையைத் த... மேலும் பார்க்க

Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே... ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?

வணக்கம்.புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், "இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட மா... மேலும் பார்க்க

என் சம்பளம் குடும்பத்துக்கு... என் எதிர்காலத்துக்கு நான் என்ன சேர்த்து வைத்திருக்கிறேன்?

காலை எட்டு மணி. சமையலறையில் குக்கர் விசிலடிக்கும் சத்தம். ஒரு கையில் காபி, மறு கையில் லேப்டாப் பேக். அவசரமாகப் பிள்ளைக்கு டிபன் பாக்ஸை மூடிவிட்டு, ஆட்டோவைப் பிடிக்க ஓடும் அந்தப் பெண்ணை நமக்குத் தெரிந்... மேலும் பார்க்க

'இந்த' சூழலில் தங்க நகை அடமானக் கடனை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிவிடாதீர்கள்

தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன்களை விட, நம் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது, 'தங்க நகை அடமானக் கடன்'. இந்தக் கடனை எப்போது வாங்கலாம்... எப்போது வாங்கக்கூடாது என்பதை விளக்குகிறார் My Assets Con... மேலும் பார்க்க