செய்திகள் :

நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்

post image

தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

தவளைகளின் தோல் மிகவும் மெல்லியதாகவும், ஈரப்பதமாகவும் இருக்குமாம். அதாவது தவளைகளில் ஏராளமான சுரப்பிகள், ரத்த நாளங்கள் உள்ளன, இது 'கியூட்டேனியஸ் ரெஸ்பிரேஷன்' (Cutaneous Respiration) எனப்படும் செயல்முறையை அனுமதிக்கிறது.

இதன் மூலம் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் நேரடியாக தோல் வழியாக இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. அதுமட்டுமில்லாமல் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.

 Frog | தவளை
Frog | தவளை

இந்த செயல்முறை தவளைகள் தண்ணீருக்கு அடியில் இருக்கும்போதும் அல்லது குளிர்கால உறக்கத்தின்போதும் சுவாசிக்காமல் உயிர்வாழ மிகவும் உதவுகிறது.

சுவாசிப்பது மட்டுமில்லாமல், தவளைகள் தங்கள் தோல் வழியாகவே தண்ணீரையும் குடிக்குமாம். அவற்றின் அடிவயிற்றில் "டிரிங்கிங் பேட்ச்" (drinking patch) எனப்படும் சிறப்புப் பகுதிகள் உள்ளன.

இந்தப் பகுதிகள் அதிக இரத்த நாளங்களைக் கொண்டுள்ளதால் ஈரமான மண், இலைகள் அல்லது பிற பரப்புகளில் இருந்து நேரடியாக ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பெற்றவை என்று டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் இதுகுறித்து வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் ஆதாரங்கள் குறைவாக உள்ள வறண்ட சூழல்களில் வாழும் தவளைகளுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் அவை நீர் நிலைகளைத் தேடிச்செல்லாமல், தங்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைப் பெறுகின்றன.

தவளைகளின் தோல் சுவாசம் மற்றும் நீர் உறிஞ்சுதல் திறன் அவற்றுக்கு பல நன்மைகளை அளித்தாலும், சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. ஊடுருவக்கூடிய தோல் அமைப்பு காரணமாக, அவை சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன.

நீர் மற்றும் நிலத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் எளிதில் அவற்றின் உடலுக்குள் நுழைந்து, உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இந்த உயிரினங்களைப் பாதுகாக்க, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

தென்காசி மாவட்டத்தில், சமீபகாலமாக மனித-யானை மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. உணவுத் தேவைக்காக யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது, இங்குள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்

சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞா... மேலும் பார்க்க

சென்னை: கேப்டன் காட்டன் கால்வாய் தூர்வாரும் பணி; ஆகாயத்தாமரை அகற்றும் ஊழியர்கள் | Photo Album

கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கை... மேலும் பார்க்க

விழுப்புரம்: நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழியும் படுகை அணைகள்..!

வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழியும் படுகை அணைகள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் குளித்து மகிழும் வாலிபர்கள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்பட... மேலும் பார்க்க

சிறிய பறவை; கோவக்கார பறவை; ஒருவேளைக்கு 100 பூச்சிகளையாவது உண்ணும் பறவை - ஆச்சர்ய தகவல்கள்

''ஓர் அதிகாலை நேரம். எனக்கு மிகவும் பிடித்த குருவிகளில் ஒன்றை பார்ப்பதற்கும் அது இரையெடுக்கும் வேகத்தை ரசிப்பதற்கும் வரப்பு ஓரம் உட்கார்ந்துகொண்டிருந்தேன். காதுகளுக்குள் கீச் கீச் என்று நுழையாமல், கீச... மேலும் பார்க்க

நீலகிரியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானை; நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விடுவிப்பு!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதி, மக்கள் குடி... மேலும் பார்க்க