செய்திகள் :

டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணை இரவில் மிரட்டி கொள்ளை; போலீஸ்காரர் மகன் உடந்தை - கோவையில் அதிர்ச்சி

post image

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கடந்த நவம்பர் 2-ம் தேதி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அதே நாள் கோவையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 25 வயது பெண் கோவையில் ஒரு விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

அவருக்கு டேட்டிங் ஆப் மூலம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தருண் (28) என்கிற இளைஞர் பழக்கமாகியுள்ளார்.

கடந்த 2-ம் தேதி மாலை தருண் தன் எஸ்யூவி காரில் அந்த பெண்ணை, புறநகர் பகுதியான காகாசாவடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

டேட்டிங் ஆப்பில் பழக்கம்
டேட்டிங் ஆப்பில் பழக்கம்

அங்கு செல்லும் வழியிலேயே தருணின் நண்பர் தனுஷ் (28) காரில் ஏறியுள்ளார். அப்போது திடீரென போட்டோ எடுத்து, அந்தப் பெண்ணை மிரட்டி அவரின் செயின், மோதிரம், பிரேஸ்லைட் உள்ளிட்ட 3 பவுன் மதிப்பிலான நகையை பறித்து, யுபிஐ பரிவர்த்தனை மூலம் ரூ.90,000 வாங்கியுள்ளனர்.

பிறகு அவரை இரவு 11 மணியளவில் சிங்காநல்லூர் அருகே இறக்கிவிட்டுள்ளனர். தாமதமாகிவிட்டதால் விடுதி செல்ல முடியாது என்று அந்த பெண் கூறியதற்கு, அவரின் செல்போனை வாங்கி ரூம் புக் செய்து அனுப்பி சென்றுள்ளனர்.

பெண்ணுக்கு மிரட்டல்
பெண்ணுக்கு மிரட்டல்

அறைக்கு வந்ததும் இந்த தகவலை பெண் தன் குடும்பத்தினரிடம் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தருண் மற்றும் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் தனுஷின் தந்தை காவல்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இருவரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் பெண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவர... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரை கிணற்றில் வீசி மறைத்ததாக இருவர் கைது - சாத்தூரில் துயரம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார்.இ... மேலும் பார்க்க

Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety

கோவையில் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிரு... மேலும் பார்க்க

Dialysis செய்தவருக்கு HIV தொற்று ரத்தம்; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரின் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இரண்டு சிறுநீரகங்களும் 2011 ஆம் ஆண்டு செயலிழந்துள்ளன. கணவரின் பராமரிப்பில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

திருப்பூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தந்தை, இளைஞர் கைது

திருப்பூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவருக்கும் திருப்பூரில் தங்கி பிரிண்டிங் வேலை செய்து வரும் சேலத்தைச் சேர்ந்த இளவரசன் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்ந... மேலும் பார்க்க

அரசியல்வாதிகள் - போலீஸ் கூட்டணி: தொழிலதிபர்களை மிரட்டி ரூ.100 கோடி சேர்த்த உ.பி. போலீஸ் அதிகாரி!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துணை போலீஸ் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் ரிஷிகாந்த் சுக்லா. ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆன சுக்லா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கும் மேலாக சொத்துகள... மேலும் பார்க்க