செய்திகள் :

"படப்பிடிப்பில் தகாத வார்த்தையை உபயோகிக்கும் தெலுங்கு இயக்குநர்" - நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு

post image

சமீபத்தில் ‘OTHERS’ என்ற தமிழ் பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் ஹிரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது பெரும் சர்ச்சைக் கிளப்பியிருந்தது.

இதுகுறித்து கோபத்துடன் பேசிய கெளரி, "என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

இதையடுத்து நடிகை கெளரி கிஷனுக்கு தமிழ், மலையாளம் திரையுலகில் இருந்து ஆதரவுகள் குவிந்தன. பலரும் அந்த பத்திரிகையாளரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

divya bharathi

இப்போது ஜி.வி.பிரகாஷ் உடன் 'பேச்சுலர்' படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கு பட இயக்குநர் ஒருவர் படப்பிடிப்பில் தகாத வார்த்தையை இயல்பாக உபயோகிப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

குறிப்பாக நரேஷ் குப்பிலி என்ற தெலுங்கு இயக்குநரின் எக்ஸ் வலைதள பதிவைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் திவ்யபாரதி, "பெண்களை 'Chilaka' (தெலுங்கில் கிளி எனப் பொருள்படுகிறது) சொல்வது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, அது 'misogyny' மனநிலை கொண்டவர்களின் வக்கிரமான மனநிலையின் வெளிபாடு. பெண்ணை புகழ்வதுபோல அவர்களது வெளித்தோற்றத்தை வக்கிரமாக வர்ணிக்கும் சொல் அது. இது ஓர் உதாரணம்தான்.

இதுபோல பல தகாத வார்த்தைகளை, தகாத எண்ணத்துடன் படப்பிடிப்புத் தளங்களில் பெண்கள் மீதும் நடிகைகள் மீது சில இயக்குநர்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்களை அவமதிக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் படப்பிடிப்பில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த இயக்குநர்.

படப்பிடிப்புத் தளங்களில் இயக்குநர்கள் இதுபோன்ற தகாத சொற்களைப் பயன்படுத்தும்போது அங்கிருக்கும் ஹீரோ உள்ளிட்ட பலரும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இது என்னமாதிரியான மனநிலை என்று தெரியவில்லை.

இங்கு எல்லோருக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. நான் ஒவ்வொரு முறையும் இதுபோன்றவர்கள் இல்லாத படக்குழுவையே தேர்வு செய்து நடிக்க நினைப்பேன். அதுதான் இப்போதைக்கு என்னால் முடிந்தது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்கள் ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் என்னை வருத்தமடையச் செய்கின்றன" என்று கூறியிருக்கிறார்.

SS Rajamouli: `அனுமனை அவமதிக்கும் பேச்சு' - இயக்குநருக்கு எதிராக இந்து அமைப்புகள் புகார்

திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி மீது ராஷ்டிரிய வானர சேனா அமைப்பினர் ஹைத்ராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் நடந்த வாரணாசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இ... மேலும் பார்க்க

"அதை 60 நாள்கள் படமாக்கினோம்"-'வாரணாசி' படம் குறித்து ராஜமெளலி

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.கதாநாயகியாக 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோ... மேலும் பார்க்க

Varanasi: "மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது..." - ராஜமெளலி ஷேரிங்ஸ்

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

Varanasi: "என் அப்பா சொன்னதைச் செய்திருக்கிறேன்!" - மகேஷ் பாபு

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

Globetrotter: ''இம்முறை காவல்துறை..." - ரசிகர்களுக்கு இயக்குநர் ராஜமெளலி அட்வைஸ்

ராஜமௌலியின் 'க்ளோப்டிராட்டர்' படத்தின் நிகழ்வு வருகிற நவம்பர் 15-ம் தேதி ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. மகேஷ் பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா உட்பட பலரும் இந்த... மேலும் பார்க்க

"கிட்டத்தட்ட விபத்துக்குள்ளாகும் சூழல்" - ராஷ்மிகா உடனான திகில் விமான பயணத்தை பகிர்ந்த ஷ்ரத்தா தாஸ்!

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் நடிகை ஷ்ரத்தா தாஸ், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது மரணத்துக்கு அருகில் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து ஹைத்ராபாத்துக்கு பயணித்த... மேலும் பார்க்க