செய்திகள் :

"பிள்ளைகளுக்கும், மருமகளுக்கும் சமையல் கற்றுகொடுக்க வேண்டும்" - கேரள முதல்வர் பேச்சால் சர்ச்சை

post image

கேரள மாநில முதல்வர் வி.டி.சதீசன் செங்கன்னூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சில தினங்களுக்குமுன் பேசும்போது தாய்மார்களின் சமையல் கைபக்குவம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

"தாய்மார்கள் தங்களின் சமையல் கலை மற்றும் சுவையை தங்களது மக்களுக்கும் (பிள்ளைகளுக்கும்), மருமகள்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று அவர் பேசியிருந்தார்.

​சமையல் என்பது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலை இல்லை என்றும், முதல்வரின் இந்த பேச்சு பாலின சமத்துவத்திற்கு எதிரானது என்றும், இதில் பெண் எதிர்ப்புக் கருத்து இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

​இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வி.டி.சதீசன் கூறுகையில், "தாய்மார்கள் சமையல் குறிப்புகளை பிள்ளைகளுக்கும் மருமகள்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதில் என்ன பெண் எதிர்ப்பு இருக்கிறது? 'பிள்ளைகள்' என்றால் பெண் பிள்ளைகளை மட்டும்தான் குறிக்குமா? விமர்சிப்பதற்காக மட்டுமே மைக்ரோஸ்கோப் வைத்து ஆராயக் கூடாது. இந்த அளவுக்கு தரம் தாழக்கூடாது.

வி.டி.சதீசன்

என் அம்மா இறந்து 27 ஆண்டுகள் ஆனபோதிலும், அவர் பரிமாறிய உணவின் சுவை இன்னும் என் நாவில் இருக்கிறது. அதனால்தான் நான் அவ்வாறு பேசினேன். என்னை விமர்சிக்க வேண்டும் என்றால் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றை ஊதிப்பெருக்கினால், அப்படி பேசுபவர்களின் நம்பகத்தன்மை போய்விடும்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய வி.டி.சதீசன்

மேலும் வக்ஃப் வாரிய பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் கூறிய வி.டி.சதீசன், "வக்ஃப் வாரிய நியமனப் பிரச்சனையை முந்தைய இடதுசாரி அரசுதான் மோசமாக கையாண்டது. 2024-ம் ஆண்டு ​டிசம்பர் 12-ம் தேதி முந்தைய வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி புதிய சட்டம் வருவதற்கு முன்பாகவே மாநில வக்ஃப் வாரியத்தை மறுசீரமைத்திருந்தால், பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருவதைத் தவிர்ப்பதற்காக முந்தைய அரசு இந்த நியமனத்தைத் திட்டமிட்டு தாமதப்படுத்தியது" என்றார்.

சமரச டீலிங்; 'கப்சிப்' ஆன அதிரடி அமைச்சர் டு `ஜோசியருக்கே கட்டம் சரியில்லை' | கழுகார்

யோசனையில் தி.மு.க புள்ளி!"எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமா..."மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலிருந்த அ.தி.மு.க மாஜி வைத்திலிங்கம், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தன் மீது லஞ்ச ஒழிப்பு... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டுப் போட்டது அறியாமை" - அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பூத் வாரியாக திமுக மற்றும் தவெக பெற்ற வாக்குகளைப் பட்டியலிட்டு காட்டி பேசி... மேலும் பார்க்க

மே.வ : முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் திடீர் ரெய்டு! - ரூ.20 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக முன்னாள் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி தொழிலதிபராக மாறிய மினார்... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள் கசிவு: "ரூ.5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து கேள்வி எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர்..."ப... மேலும் பார்க்க

ட்ரம்ப் சொன்னது போல், ஈரான் மீது 'சக்திவாய்ந்த தாக்குதல்' நடத்தும் அமெரிக்கா; என்ன நடக்கிறது?

ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு, ஈரானும், அமெரிக்காவும் எந்த அறிவிப்புமின்றி தங்களுக்குள் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. அமைதியாக இருதரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று அப்போது கூறப்பட்டது. ஈரான் தாக... மேலும் பார்க்க