செய்திகள் :

"பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை விஜய் கைவிட வேண்டும்" - சீமான்

post image

காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட முயன்று வருகிறது கர்நாடகா. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதாக கூறப்பட்டது.

ஆனால், இன்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "இப்போதைக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே விஜய் கர்நாடகா செல்வது சம்பந்தமாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை!

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை.

முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை.

கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்?

உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.

கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்?

காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா?

இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்?

சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை

பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை..!

காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிடம் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது?

உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா?

தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.

ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்".

காவிரி விவகாரம்: ``மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டு இன்னும் மௌனம்" - கனிமொழி

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான பிரச்னை சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு இடையே எழுந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தமிழ்நாடு... மேலும் பார்க்க

``நான் சங்கியா, காங்கிரஸா? இல்லை, நான் இவள்" - சோனம் வாங்சுக்கின் மனைவி பதில்

நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். அவர் உடல்நி... மேலும் பார்க்க

ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு பதிவு!

ஐதராபாத்தில் மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன்? சில நாள்களுக்கு முன்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம... மேலும் பார்க்க

விஜய்க்கு நோ சொன்ன சிவக்குமார்; தமிழ்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு - என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா சென்று ந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்துப் பேசவிருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் : `நிபந்தனைகளை மீறினால், உடனடி ரத்து' - செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்!

டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் பார்கள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ... மேலும் பார்க்க