செய்திகள் :

மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்!

post image

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வெல் தாலுகாவில் உள்ளசவானே தொழிற்பேட்டையில் எச்பிசிஎல் நிறுவனத்தின் கேஸ் நிரப்பும் மையம் இருக்கிறது. தொடர்ந்து அங்கு பெய்த மிகக் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சிலிண்டர்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆலை வளாகத்தில் இருந்த சிலிண்டர்களை முழுமையாக மழை அடித்துச் சென்று விட்டது. நிரப்பப்பட்ட மற்றும் காலியானவை உட்பட சுமார் 3000 எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர்கள் பாதாள்கங்கா நதியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, ஆற்றில் மிதந்து வரும் அல்லது கரைகளில் ஒதுங்கும் சிலிண்டர்களைத் தொடுவதோ அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜவாலே அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த சிலிண்டர்கள் காலியாக இருக்கின்றனவா அல்லது அவற்றில் அபாயகரமான எரிவாயு நிரம்பியுள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் சிலிண்டர்கள் இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வேகமாக ஓடும் சேறு கலந்த நீரில் ஆயிரக்கணக்கான எல்பிஜி சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பன்வெல் ஆலையின் உள்கட்டமைப்பு எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.

கடற்கரை பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.!

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! | க்யூட் கிளிக்ஸ்

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!... மேலும் பார்க்க

அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து... மேலும் பார்க்க

சூடான சமோசா வாங்க ரயிலை நடுவழியில் நிறுத்திய பைலட் ? - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

ரயில்களை தேவையில்லாமல் நிறுத்தம் இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. ஆனால் சில நேரங்களில் தொழில் நுட்ப காரணங்களுக்காக ரயில் சில இடங்களில் நிறுத்தப்படுவதுண்டு. ஆனால் மத்திய பிரதேசத்தில் ரயில் டிரைவர்கள் ... மேலும் பார்க்க

சிங்கத்தின் பிடியில் `திக்... திக்' 30 நிமிடங்கள்! - என்ன செய்து உயிர்பிழைத்தார் குஜராத் நபர்?

குஜராத்தில் உள்ள கிர் (Gir) காடுகள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசியச் சிங்கங்கள் வாழ்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக உணவு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக அவை அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து விட... மேலும் பார்க்க

AI மூலம் ஆடம்பரம்... உயிருக்கே விலைபேசிய நண்பன்! - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நடந்த விபரீதம்

சமூக வலைதளங்களில் நாம் பகிரும் ஒரு புகைப்படம், ஒரு வீடியோ... அது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தானா? அல்லது, நமக்கே தெரியாமல் நமக்கெதிரான ஒரு கண்ணியாக மாறி, நமது நிம்மதியையே குலைத்துவிடுமா? நாக்பூரில் நட... மேலும் பார்க்க

மும்பை: கர்ப்பிணிக்குச் சிகிச்சையளிக்க தாமதம்; பெண் மருத்துவரைத் தாக்கிய சிவசேனா கவுன்சிலர்

மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ள டோம்பிவிலியில் உள்ள சாஸ்திரிநகர் மருத்துவமனையில், பிரியங்கா (33) என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் குழந்தை வயிற்றில் மாறி இருந்... மேலும் பார்க்க