செய்திகள் :

ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸிற்கு ஒதுக்கிய விஜய்! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

post image

கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.

அதிமுக சி.வி சண்முகம் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த ராஜ்ய சபா சீட்டிற்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

அந்த இடத்தை காங்கிரஸிற்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ராஜ்ய சபா சீட்டை தவெக தலைவர் விஜய் ஒதுக்கியிருக்கிறார்.

தவெக விஜய் - JCD பிரபாகர்
தவெக விஜய் - JCD பிரபாகர்

இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seaf) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் மாற்றம்: ஸ்டாலின் அறிவித்தார்; விஜய் நிறைவேற்றுவாரா? காத்திருப்பில் வேலூர் காவலர் பயிற்சிபள்ளி

புதிதாக தேர்தெடுக்கப்படும் காவலர்களுக்கு சட்ட அறிவு பயிற்சிகள் முதல் அவர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் வரை வழங்கும் பணியினை காவலர் பயிற்சி பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள காவலர் ... மேலும் பார்க்க

இன்பதுரை வெற்றி செல்லாது: `10 ஆண்டுகாலப் போராட்டம்: நீதி வென்றது' - அப்பாவு மகிழ்ச்சிப் பேட்டி!

கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அப்பாவுவை விட 104 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் முறை... மேலும் பார்க்க

ராஜினாமா செய்த சட்டப்பேரவைச் செயலாளர்; `நிருபர் பணி டு தலைமை பதவி...' - யார் இந்த சீனிவாசன்?

தமிழகச் சட்டப்பேரவையின் செயலாளராகப் பதவி வகித்துவந்த கே.சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது, தலைமைச் செயலக வட்டார‌த்தில் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.தவெக அரசு பதவியேற்ற பின் சட்டமன்ற உ... மேலும் பார்க்க

`முன்னுரிமை அடிப்படையில் குற்றங்களை கட்டுப்படுத்த..!'- புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்ப... மேலும் பார்க்க

உருவான இரண்டாம் அணி; மம்தாவுக்கு பெர்சனல் Loss; வேடிக்கை பார்க்கும் பாஜக- சிவசேனா ஆகிறதா திரிணாமுல்?

2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் ஆட்சியில் பறந்த திரிணாமுல் காங்கிரஸின் கொடியை இறக்கி, தங்களது காவி கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது பாஜக. திரிணாமுல் காங்கிரஸின் நிறுவனரான மம்தா பானர்ஜி இந்தத் தேர்த... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யை சந்தித்த கிரிஷ் சோடங்கர்; ராஜ்ய சபா சீட்டை கேட்கும் காங்கிரஸ்?' - விவரம் என்ன?

தமிழகத்தில் ஒரு ராஜ்ய சபா எம்.பி இடம் காலியாக இருக்கும் நிலையில், அந்த ஒரு இடத்தை தவெகவிடம் கேட்டுப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். இந்நிலையில், இன்று தலைமைச் செயலகம் வந்த காங்கிரஸ் ம... மேலும் பார்க்க