செய்திகள் :

'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02

post image

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..!

இன்றைய தேதிக்கு தேர்தல் அரசியலில் திமுக ஒரு மாபெரும் சக்தி. ஆனால், 1956 இல் அப்படியொரு சம்பவம் மட்டும் நடந்திடாமல் போயிருந்தால் திமுக தேர்தலிலேயே போட்டியிட்டிருக்க மாட்டார்கள். திமுவை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த அந்த சம்பவம் என்ன தெரியுமா?

அண்ணா
அறிஞர் அண்ணா

1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் பெரியாரின் பிறந்தநாளில் திமுக என்கிற கட்சியைத் தொடங்கினார் அண்ணா.

1952 இல் சுதந்திரத்துக்கு பிறகு மதராஸ் மாகாணத்துக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தது. திமுக தோற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே அந்த கட்சி போட்டியிடவில்லை. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கும் காமன்வீல் கட்சிக்கும் திமுக தங்களின் ஆதரவை தெரிவித்தது.

1957 இல் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மதராஸ் மாகாணம் தயாராகி வந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்கிற குழப்பம் திமுகவுக்குள் நிலவியது.

திருச்சி மாநாடு
திருச்சி மாநாடு

1956 இல் திருச்சியில் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்திருந்தது. அந்த மாநாடு மைதானத்தின் நுழைவு வாயிலில் அண்ணா இரண்டு பெட்டிகளை வைத்தார். திமுக தேர்தலில் போட்டியிடலாம் என நினைப்பவர்கள் ஒரு பெட்டியிலும் போட்டியிட வேண்டாம் என்பவர்கள் ஒரு பெட்டியிலும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மாநாட்டு திடலிலேயே வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக தேர்தலில் போட்டியிட வேண்டுமென பெருவாரியாக தொண்டர்கள் வாக்களித்தனர். மாநாட்டின் மேடையிலேயே திமுக தேர்தலில் போட்டியிடுமென அண்ணா அறிவித்தார்.

அண்ணா, கருணாநிதி
அண்ணா, கருணாநிதி

1957 இல் நடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் திமுக வென்றது. காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவும் குளித்தலையில் இருந்து கருணாநிதியும் வென்று முதல் முறையாக சட்டமன்றத்துக்கு சென்றார்கள்.

1962 தேர்தலில் 50 இடங்களை திமுக வென்றது. எதிர்க்கட்சி அந்தஸ்த்திலும் அமர்கிறது. 1967 தேர்தலில் பெரும்பான்மையாக வென்று ஆட்சியையும் பிடிக்கிறது. அண்ணாதுரை மதராஸ் மாகாணத்தின் முதல்வர் ஆனார். மதராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது.

அப்போது இருந்து இப்போது வரைக்கும் தமிழக அரசியல் திமுகவை மையப்படுத்தி இருப்பதற்கும் தேர்தல் அரசியலில் திமுக மாபெரும் சக்தியாக இருப்பதற்கும் 1956 இல் நடந்த திருச்சி மாநாடுதான் மிக முக்கிய காரணம்.!

"நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள்" - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் ... மேலும் பார்க்க

தமிழே உயிரே! | உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! | மொழிப்போரின் வீர வரலாறு – 4

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 41965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருக்கும்’ என்ற சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அற... மேலும் பார்க்க

"ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.... மேலும் பார்க்க

அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். EPSஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்... மேலும் பார்க்க

1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

கட்டுரையாளர்: கப்பிகுளம் ஜெ.பிரபாகர்அரசியல் ஆடுபுலி 1 - 1977 தேர்தல்2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்த... மேலும் பார்க்க