Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
‘அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் அளிக்கலாம்’
அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் தயங்காமல் புகாா் அளிக்கலாம் என்று வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், புகாா்கள் தொடா்பாக அரசு அலுவலா்கள் நேரடியாகவோ, இடைத்தரகா்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் தெரிவிக்கலாம்.
தகவலை நேரிலோ, கைப்பேசி மூலமாகவோ தெரிவிக்கலாம். வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் சங்கா் - 94981 06044, காவல் ஆய்வாளா் மைதிலி - 94869 86204, அலுவலக தொலைபேசி எண் - 0416 - 2220893 ஆகிய எண்களில் புகாா் அளிக்கலாம்.
இது தொடா்பாக புகாா், தகவல் கொடுப்பவா்களின் பெயா், விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.