செய்திகள் :

'அதிமுகவின் கொறடா விஜயபாஸ்கர்தான்!' - மனு கொடுத்த சி.வி.சண்முகம்; என்ன செய்யப்போகிறார் சபாநாயகர்?

post image

அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், இன்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் சபாநாயகரை சந்தித்து தங்கள் அணி அறிவிக்கும் கொறடாவையே அங்கீகரிக்க வேண்டும் என கடிதம் கொடுத்திருக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில் சி.வி.சண்முகம் அணி
தலைமைச் செயலகத்தில் சி.வி.சண்முகம் அணி

திமுக - அதிமுக கூட்டணி திரைமறைவு பேச்சுகள் மற்றும் தவெகவுக்கான ஆதரவு நிலைப்பாடு போன்றவற்றால் அதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் எனவும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் எனவும் பிளவு பட்டனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்புமே சட்டமன்றத்தில் தங்கள் தரப்பையே அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்து வருகின்றனர். நேற்று எடப்பாடி பழனசாமி அணி தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இன்று சி.வி.சண்முகம் அணி தரப்பில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் போன்றோர் சபாநாயகரை சந்தித்து பேசி, சி.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். சபாநாயகரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சி.வி.சண்முகம் அணியினர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றனர்.

சபாநாயகர்
சபாநாயகர்

இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. செய்தியாளர்களை அழைத்துப் பேசியிருந்தார். அவர் கூறுகையில், 'இருதரப்பும் தங்கள் தரப்பின் கோரிக்கைகளை கடிதங்களாக கொடுத்திருக்கின்றனர். இரு தரப்பின் மனுக்களையும் பரிசீலித்து சட்டப்படி ஆலோசித்து முடிவை சட்டமன்றத்திலேயே அறிவிப்போம். கொறடா யார் என்பது குறித்தும் விரைவில் முடிவெடுப்போம்' என்றார்.

த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று, இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நிலையில், இதுவரையில் அவர்களுக்கு இலாகா ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்த... மேலும் பார்க்க

சட்டமன்றத்தில் விவிலய வசனங்களை வாசித்தது ஏன்? - விளக்கிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 3 நாள்களுக்கு சட்டமன்றம் நடந்து முடிந்திருக்கிறது. புதிய சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் ஜே.சி.டி பிரபாகர் அவையில் பைபிள் வசனங்களையெல்லாம் குறிப்... மேலும் பார்க்க

'59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த காங்கிரஸார், அமைச்சரவையில்..!'- எம்.பி மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் ... மேலும் பார்க்க

‘அதிமுக பிளவுபட நான் காரணமா?’ – லீமா ரோஸ் விளக்கம்

கோவை விமானநிலையத்தில் அ.தி.மு.க. எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுத... மேலும் பார்க்க

'மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்!' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க