செய்திகள் :

‘அதிமுக பிளவுபட நான் காரணமா?’ – லீமா ரோஸ் விளக்கம்

post image

கோவை விமானநிலையத்தில் அ.தி.மு.க. எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கூட்டணி சேர்ந்துள்ளோம்.

தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்களை தொடர்ந்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. பெண்கள் பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் திட்டத்தினை வரவேற்கிறோம். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

லீமா ரோஸ்

நல்ல ஆட்சி மலரும் என எதிர்பார்க்கிறோம். முதல்வர் விஜய்  அறிவித்த திட்டங்களை செயல்படுத்த, பதவி ஏற்பு விழாவின் போது டைம் கேட்டுள்ளார். பள்ளி, கல்லூரி, வழிபாட்டுதலங்கள் அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது பெரிய மகிழ்ச்சி. எடுத்துகாட்டாக புதிய அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

`அ.தி.மு.க-வில் உங்களால் தான் பிளவு ஏற்பட்டது' என விமர்சனம் எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, “அப்படி யெல்லாம் இல்லை. நாங்கள்  அ.தி.மு.க-வை ஒன்று சேர்க்கத்தான் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் ஒன்று சேர்ந்துவிடுவோம். நாங்கள் கூட்டணிக்கு சப்போர்ட் தான் பண்ணியுள்ளோம்” என பதிலளித்தார்.

த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று, இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நிலையில், இதுவரையில் அவர்களுக்கு இலாகா ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்த... மேலும் பார்க்க

சட்டமன்றத்தில் விவிலய வசனங்களை வாசித்தது ஏன்? - விளக்கிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 3 நாள்களுக்கு சட்டமன்றம் நடந்து முடிந்திருக்கிறது. புதிய சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் ஜே.சி.டி பிரபாகர் அவையில் பைபிள் வசனங்களையெல்லாம் குறிப்... மேலும் பார்க்க

'59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த காங்கிரஸார், அமைச்சரவையில்..!'- எம்.பி மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் ... மேலும் பார்க்க

'அதிமுகவின் கொறடா விஜயபாஸ்கர்தான்!' - மனு கொடுத்த சி.வி.சண்முகம்; என்ன செய்யப்போகிறார் சபாநாயகர்?

அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், இன்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் சபாநாயகரை சந்தித்து தங்கள் அணி அறிவிக்கும் கொறடாவையே அங்கீகரிக்க வேண்டும் என கடிதம் கொடுத்திருக்கின்றனர். தலைமைச் செயல... மேலும் பார்க்க

'மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்!' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க