செய்திகள் :

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

post image

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து ஆலோசித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கட்சியின் இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமிக்க வலியுறுத்தியுள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

மாவட்ட நிர்வாகிகளாக முன்னாள் எம் பி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பகுதிச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர்

பேசியபோது, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கட்சியின் இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமிக்க வலியுறுத்தினர். அதற்கு தனக்கு அதில் விருப்பம் இல்லை என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து யாரும் பேச வேண்டாம் என்று தெரிவித்தாலும், அதன்பின் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கேபி முனுசாமி பேசியது தான் கூட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பின், கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் நாம் அனைவருக்கும் இருப்பதாகவும், அதனால் கட்சிக்கு இளைஞரணி செயலாளராக மிதுனை நியமிக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மிதுன் குமார்

அவரை நியமிக்க வேண்டுமா வேண்டாமா என்பது கட்சியின் பொதுசெயலாளர் என்ற முறையில் அவரது முடிவு என்றாலும், கட்சியின் நலன் கருதி மிதுன் கட்சிக்குள் வர வேண்டும் என்று நினைத்தால் அதனை பொதுசெயலாளர் என்ற முறையில் தடுக்க கூடாது என்று பேசியதும், பலரது புருவங்கள் உயர்ந்துள்ளது. கேபி முனுசாமி பேசியதை கவனமுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் நம் கட்சியில் இருந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளே வேறு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களை கட்சிக்குள் கொண்டுவந்து பொறுப்புகள் கொடுக்காததும் காரணமாக அமைந்துவிட்டது.

எவ்வளவு நாள் தான் வாரிசு அரசியல், கட்சிக்குள் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க கூடாது என்று பேசுவது, கட்சியை மேலும் கட்டமைக்கும் பணியை நம் குடும்பத்திலிருந்தே நாம் தொடங்க வேண்டும். அதற்கு அவர்களை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று நிர்வாகிகள் பேசியுள்ளதை அதிமுக பொதுசெயலாளர் கவனமுடன் கேட்டிருக்கிறார்.

ஸ்டாலின், உதயநிதி

மிதுனை கட்சிக்குள் கொண்டுவந்து பொறுப்பு கொடுத்தால் திமுகவின் வாரிசு அரசியலை பற்றி பேச முடியாது, ஆட்சியில் இருப்பது தவெக என்றாலும் திமுகவின் எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம் அதிமுக என்பதால் திமுகவின் மையப்புள்ளியாக இருக்கும் வாரிசு அரசியலை எப்படி விமர்சிப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது.

கட்சியின் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியின் குரலாக பொதுவெளியில் ஒலிக்கும் கேபி முனுசாமியே இப்படி பேசியிருப்பது அரசியல் ரீதியாக கவனிக்க வேண்டியுள்ளது.

என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி ? பொறுத்திருந்து பார்ப்போம்.!

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க