செய்திகள் :

"அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்"- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்

post image

‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’.

‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல்
‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல்

அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ மிகப்பெரிய ஹிட்.

இப்போது வரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து 'Noise and Grains'என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஹ்மான், " ஒரே பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இந்தப் பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் இந்த ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது.

அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் நாம் எதிர்பார்த்த அந்த டியூன் என்று உணர்ந்தேன்.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

இந்தப் பாடலில் டஃப் (duff) என்ற இசைக்கருவியை பயன்படுத்தினோம். அது பழங்காலத்து கருவி.

பெரிதாக யாரும் அதனைப் பயன்படுத்தாததால் டஃப் கருவியை நாங்கள் அந்தப் பாடலில் அதிகமாக பயன்படுத்த முயன்றோம்" என்று பகிர்ந்திருக்கிறார்.

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க

"இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!"- சரத்குமார்

'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார்.கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே: 'ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல' - ரீ-ரிலீஸ் குறித்து சூர்யா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீ... மேலும் பார்க்க

Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!

வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்துள்ளது. நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் த... மேலும் பார்க்க

`'அது உண்மையல்ல' - லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் பிறகு வேலைகள் தொடங்கும்' - இளையராஜா பயோபிக் அப்டேட்!

தனுஷ் தற்போது பல படங்களை தனது லைன்-அப்பில் கமிட் செய்து வைத்திருக்கிறார். 'போர்த் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கும் 'கர' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து 'அமரன்' ராஜ்குமார் பெரியசாம... மேலும் பார்க்க

Mamitha Baiju: "நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன்!" - 'நாளை நாளை' ட்ரோல் குறித்து மமிதா பைஜூ

மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாக... மேலும் பார்க்க