'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் ...
"அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்"- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்
‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’.

அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ மிகப்பெரிய ஹிட்.
இப்போது வரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து 'Noise and Grains'என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஹ்மான், " ஒரே பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இந்தப் பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் இந்த ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது.
அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் நாம் எதிர்பார்த்த அந்த டியூன் என்று உணர்ந்தேன்.

இந்தப் பாடலில் டஃப் (duff) என்ற இசைக்கருவியை பயன்படுத்தினோம். அது பழங்காலத்து கருவி.
பெரிதாக யாரும் அதனைப் பயன்படுத்தாததால் டஃப் கருவியை நாங்கள் அந்தப் பாடலில் அதிகமாக பயன்படுத்த முயன்றோம்" என்று பகிர்ந்திருக்கிறார்.


















