செய்திகள் :

அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாகச் சாடும் அமெரிக்கா

post image

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த நிலையில்தான், உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயம் - 'இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்'.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவைத் தாண்டிய சந்தைக்கு எளிதான மட்டுமல்லாமல்... வரி இல்லாத சந்தைக்கும் இந்தியாவை அழைத்துச் செல்கிறது.

இது அமெரிக்காவின் கண்ணை உறுத்தாமலா இருந்திருக்கும்?

ஸ்காட் பெசென்ட்
ஸ்காட் பெசென்ட்
ஆம்... உறுத்தியிருக்கிறதுதான். அதனால்தான், அமெரிக்காவின் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் உக்ரைனைக் காட்டி ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார்.

"ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறோம்.

ஆனால், கடந்த வாரம் என்ன நடந்தது? ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளன.

ரஷ்யா - உக்ரைன் போரினால் ஐரோப்பிய நாடுகள்தாம் போர் முனையில் உள்ளன.

இந்தியா தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்களை வாங்குகிறது. ஐரோப்ப நாடுகளோ சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை வாங்குகின்றன. ஆக, ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்கு எதிரான போர்களுக்கு அவர்களே நிதியளிக்கின்றன.

'வர்த்தகம்'தான் மிக முக்கியம்

நாங்கள் இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்தோம். எங்களுடன் இணைந்து இந்த வரியைப் போட, ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த ஒப்பந்தம்தான் இதற்குக் காரணம்.

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொரு முறை உக்ரைன் மக்களைப் பற்றி பேசும்போதும், அவர்கள் அந்த மக்களைத் தாண்டி வர்த்தகத்தை முன்னிறுத்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் போரை நிறுத்துவதை விட, வர்த்தகம்தான் மிக முக்கியம்" என்று பேசியுள்ளார்.

'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்

நிறைவு விழாவில் பிரதமர்!'டீல்' பேசும் வேலுமணிஅ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். ... மேலும் பார்க்க

`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்

சிலம்பமே சுவாசம்!ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. 1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டா... மேலும் பார்க்க

'விஜய் சந்திப்பு குறித்து கேள்வி கேட்காத ராகுல்' டெல்லியில் நடந்தது என்ன? - பிரவீன் சக்கரவர்த்தி

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும... மேலும் பார்க்க

"Helicopter விபத்து குறித்த பய‌த்தில் கேட்டேன்; ஆனா பின்னாடி வேற‌ அரசியல்" - விசிக MLA பாலாஜி பேட்டி

'லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவுவிடம் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் புகார் கொடுத்த விவகாரம் பல ... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”எடப்பாடி பழனிசாமியின் துரோகம் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது”- முதல்வர் ஸ்டாலின்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``பயணங்களில் வரும் அலைச்சலை விட, நீங்கள் தரும் அன்புதா... மேலும் பார்க்க