செய்திகள் :

'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்

post image

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். அ.தி.மு.க தலைமை மீதான அதிருப்தியில் ஒதுங்கியிருப்பவர்களுக்கு அவரே நேரடியாக போன் செய்து, 'மீண்டும் கட்சிப் பணிக்கு வாங்க... உரிய மரியாதைக்கும் சீட்டுக்கும் நான் பொறுப்பு...' என்று டீல் பேசுகிறாராம். வேலுமணியின் வாக்குறுதியை நம்பி சிலர் தலையசைத்திருப்பதாகத் தகவல்.

வேலுமணி

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயண நிறைவு விழாவை, பிப்ரவரி மாத இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதமர் கலந்து கொள்ளவும் அவரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான இடம் சேலமா, கோவையா என்பது மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாக, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடையேறும் வகையில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தே.ஜ கூட்டணியில் ஏற்பாடுகள் மும்முரமாகின்றன.

கடந்த சட்டமன்ற தேர்தலில், கடைக்கோடி தொகுதியில் போட்டியிட்ட ஆளும்கட்சியின் 'ஆஸ்'தானமான தலைமைக் கழகப் பிரமுகர் தோல்வியைத் தழுவினார். அவருடைய தோல்விக்கு, அதே தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ' பூ கவிஞர்' பிரமுகரின் உள்ளடி வேலைதான் காரணம் என்று தொகுதி முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. தேர்தலுக்குப் பின் தலைநகரில் செட்டிலான தலைமைக் கழக பிரமுகர், மீண்டும் இம்முறை கடைக்கோடி தொகுதியில் களமிறங்க காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அதே தொகுதியைக் குறிவைத்து 'கவிஞர்' பிரமுகரும் முட்டி மோதுவதால், ஆளுங்கட்சியில் அனல் பறக்கிறது. ''எனக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த 'கவிஞர்' பிரமுகருக்கு மட்டும் கிடைக்கக் கூடாது'' என்று தலைமைக்கழக பிரமுகர் கச்சைக் கட்டிக்கொண்டு களமாடுவது, அறிவாலயத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

பனையூர் கட்சியின் 'உப்பு' மாவட்டச் செயலாளர் பதவி, இனிஷியல் பிரமுகருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. அந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த பெண் பிரமுகர், பனையூர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்தி, கடைசியில் ஏதேதோ செய்துகொண்ட சம்பவமெல்லாம் பரபரப்பைக் கிளப்பின. இந்தச் சூழலில், கட்சியில் புதிதாக இணைந்த கொங்கு சீனியரை நேரில் சந்தித்து, கண்ணீர்விட்டு கதறியிருக்கிறாராம் பெண் பிரமுகர். ''என்னுடைய சொந்த நிதியிலிருந்து நிறைய பணிகளைச் செய்திருக்கிறேன். அந்த இனிஷியல் பிரமுகருக்கு பதவி வழங்கப்பட்ட பிறகு, மாவட்டத்தில் கட்சியே சோர்ந்துவிட்டது. நீங்களே விசாரித்து நடவடிக்கை எடுங்கள்..'' என்று கண்ணீர் சிந்தினாராம். இந்த தகவலையெல்லாம், கொங்கு சீனியரும் தலைமையிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, அந்தப் பெண் பிரமுகருக்கு புதிய வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.

தலைநகரில், பவர்புல் பதவியிலிருக்கும் 'ஐஸ்க்ரீம்' காக்கியை தேர்தல் ஆணையம் மாற்றுவதற்கு முன்பாக, நமக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றுவது சரியாக இருக்கும் என்று ஆலோசனை செய்திருக்கிறதாம் ஆளும் தரப்பு. அவர் இடத்துக்கு யாரைக் கொண்டு வருவது என்ற ஆலோசனையில், இயக்குநர் பெயர் கொண்டவர் மற்றும் 'பாச' அதிகாரியின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயமறிந்த இயக்குநர் பெயர்கொண்ட அதிகாரி, 'எனக்கு அந்த பொறுப்பே வேண்டாம்' என்று நழுவியிருக்கிறார். அதனால், 'பாச' அதிகாரியையே பவர்புல் பதவியில் நியமிக்கலாமா, அல்லது வேறு யாரையாவது கொண்டு வரலாமா என்று தீவிரமாக ஆலோசிக்கிறாதாம் ஆளும் கட்சி தரப்பு.

பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். வரும் தேர்தலில், சாத்தூர் அல்லது நாங்குநேரி தொகுதிக்கு அவர் மாறவிருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் புதிய தமிழகத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறாராம் நயினார். 'இந்தக் கூட்டணிக்குள் புதிய தமிழகம் வந்தால், திருநெல்வேலி தொகுதிக்குள்ளிருக்கும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் நயினாருக்குச் சாதகமாகலாம்.

நயினார் நாகேந்திரன்

அதனால்தான், தொகுதி மாறும் திட்டத்தில் குழம்பிப் போயிருக்கிறார் நயினார்...' என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதற்கிடையே, 'இந்தக் கட்சியோட மாநிலத் தலைவராக இருந்துகொண்டு, சிட்டிங் தொகுதியை மாற்றினால் அது விமர்சனத்தைக் கிளப்பாதா... அ.தி.மு.க., அ.ம.மு.க கூட்டணியில் இருக்கும் நிலையில், தைரியமாக திருநெல்வேலியிலேயே போட்டியிட வேண்டியதுதானே...' என்று நயினாருக்கு நெருக்கமான சிலரும் குழப்பிவிடுவதால், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம் நயினார்.!

'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது. இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவ... மேலும் பார்க்க

அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவ... மேலும் பார்க்க

`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்

சிலம்பமே சுவாசம்!ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. 1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டா... மேலும் பார்க்க

'விஜய் சந்திப்பு குறித்து கேள்வி கேட்காத ராகுல்' டெல்லியில் நடந்தது என்ன? - பிரவீன் சக்கரவர்த்தி

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும... மேலும் பார்க்க

அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாகச் சாடும் அமெரிக்கா

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.இந்த நிலையில்தான்,... மேலும் பார்க்க

"Helicopter விபத்து குறித்த பய‌த்தில் கேட்டேன்; ஆனா பின்னாடி வேற‌ அரசியல்" - விசிக MLA பாலாஜி பேட்டி

'லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவுவிடம் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் புகார் கொடுத்த விவகாரம் பல ... மேலும் பார்க்க