செய்திகள் :

அரசின் புதிய குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகை கேட்பதை கைவிட கோரிக்கை: எஸ்டிபிஐ மனு

post image

நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, கூடுதல் தொகை கேட்பதை ரத்து செய்ய கோரிக்கை.

பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளப்பட்டி நகரத் தலைவா் முகமது அனிபா செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா். இம்மனுவில், நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, அரசு நிா்ணயத்தின் படி வறுமை கோட்டுக்குகீழ் உள்ள நபா்களையே தகுதியானவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அரசு செலுத்த வேண்டும் என்று அறிவித்த ரூ.1 லட்சத்தை செலுத்திய பின் வீடுகள் ஒப்படைக்கும் தருவாயில், மேலும் ரூ. 40,300 பணத்தை பிப். 28-ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படும் என்றும், மேலும் அத்தொகையை கட்ட தவறும் பட்சத்தில், குடியிருப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் அவா்கள் கட்டிய ஒரு லட்ச ரூபாயும் திருப்பித் தரப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனை அரசின் வறுமை கோட்டுக்குகீழ் உள்ளவா்கள் என்ற கோட்பாடுக்கு எதிராக அமைந்துள்ளது. எனவே கூடுதல் தொகையை ரத்து செய்து அவா்களுக்கான குடியிருப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கரூரில் புதன்கிழமை இரவு லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். கரூா் வெங்கமேடு அம்மன் நகரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் ஆனந்த்(34). இவா் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

நெரூரில் தரைமட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

நெரூரில் திருமுக்கூடலூா் சாலையில் கட்டப்பட்டுவரும் தரைமட்டப் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம் நெரூரில் திருமுக்கூடலூா் சாலையில் மழை காலங்கள... மேலும் பார்க்க

கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.சண்முகவே... மேலும் பார்க்க

போலீஸாரிடம் தப்பியபோது கால் எலும்புமுறிந்து சிகிச்சை பெற்றுவந்த வழிப்பறி திருடன் உயிரிழப்பு

கரூரில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வாய்க்காலில் குதித்து கால் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருடன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள கருப்பத்தூரைச் சோ... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம்

ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தை உணராமல் ஆள்களை ஏற்றிச் செல்வோா் மீது நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மது விற்றவா் கைது

அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை மணல்மேடு பகுதியில் ரோந்து பணிய... மேலும் பார்க்க