செய்திகள் :

"அவர்தான் நான் பெயிலாக காரணம்" - ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் ஆண்டு வரை படித்ததற்கு டி.சி சான்றிதழ் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே சான்றிதழுக்கான கட்டணத்துடன் விண்ணப்பிக்கும்படி பள்ளி முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

மேலும் தான் 2023ம் ஆண்டு பள்ளியில் பெயிலாவதற்குக் குறிப்பிட்ட வகுப்பு ஆசிரியர்தான் காரணம் என்று கூறினார். இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் முதல்வர் அறைக்கு வந்தார். அவரிடமும் அந்த மாணவர் இது தொடர்பாக வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை வயிற்றில் குத்தினார்.

இதனைத் தடுக்க முதல்வரும், பள்ளி ஊழியரும் முயன்றனர். ஆனால் அவர்களையும் மாணவன் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

கத்தியால் குத்திய மாணவன்
கத்தியால் குத்திய மாணவன்

கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆசிரியர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாணவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் விவேக் ஜாதவ் கூறுகையில், "சத்ரபதி சாம்பாஜி நகரில், 2023-ஆம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்து அடுத்த ஆண்டு வகுப்பில் சேராத மாணவர் ஒருவர், லிட்டில் ப்ளவர் பள்ளிக்குச் சென்று தனது மாற்றுச் சான்றிதழை (TC) வழங்குமாறு கோரினார்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து அதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு முதல்வர் அவரிடம் கூறியபோது, ​​அந்த மாணவர் அதை மறுத்துவிட்டார். தான் தேர்வில் தோல்வியடைந்ததற்கும், அதன்பின் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கும் தனது 2023-ஆம் ஆண்டு வகுப்பு ஆசிரியரே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அந்த மாணவர் சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் முற்றிய நிலையில் பள்ளிக்குள்ளேயே அவரை கத்தியால் குத்தினார்'' அவர் தெரிவித்தார்.

கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் பெயர் விஷால் என்று தெரிய வந்துள்ளது. கத்தியால் குத்தப்பட்ட காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சி வைரலாகி இருக்கிறது.

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: "கழிவறையில் மறைத்து வைப்போம்" - விசாரணையில் பகீர் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது அதனைத் திருடியதாக உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி கோடிக... மேலும் பார்க்க

கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எடமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (30). விவாகரத்தான இவர், கடந்த ஜூன் 27-ம் தேதி திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எண் 108-ல் வாடகைக்கு தங்கியு... மேலும் பார்க்க

டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும்" - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்... மேலும் பார்க்க

கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.மனு (40). கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறுமி சென்றுள்ளார்... மேலும் பார்க்க

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்

தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்... மேலும் பார்க்க