செய்திகள் :

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

post image

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், தனலட்சுமியின் நடத்தையில் விஜயகுமாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுவந்திருக்கிறது. இதுதொடர்பாக, மனைவியிடம் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார் விஜயகுமார்.

தனலட்சுமி முதலில் ஷூ கம்பெனியில் வேலைக்குச் சென்றதாகவும், இப்போது பேரணாம்பட்டு டவுன் ஆமினா வீதியில் வீட்டு வேலை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் மூத்த மகள் அணைக்கட்டு பகுதியிலுள்ள விடுதியில் தங்கி பதினோராம் வகுப்புப் படித்துவருகிறார். மகளை வீட்டுக்கு அழைத்துவந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் விடுதிக்கு அழைத்துசென்று விட்டிருக்கிறார் தனலட்சுமி.

தனலட்சுமி

இதையடுத்து, ஆம்பூர் பகுதியிலுள்ள சினிமா தியேட்டருக்குச் சென்றிருக்கிறார். உடன் இரண்டாவது மகளும் இருந்திருக்கிறார். அப்போது அங்கு டிக்கெட்டுடன் சின்னவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற ஆண் நண்பர் தனலட்சுமிக்காக காத்திருந்தார். தனலட்சுமியும், குமரேசனும் சமீபகாலமாக திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துவந்ததாகவும், இப்படி அடிக்கடி வெளியில் சந்தித்துக்கொள்வதை வழக்கமாக்கியிருந்தாகவும் சொல்லப்படுகிறது.

படம் பார்த்த பிறகு, ஆண் நண்பர் குமரேசன் ஆட்டோ பிடித்து தனலட்சுமியையும், அவரின் இரண்டாவது மகளையும் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது, `குமரேசன் வந்துபோனதை அப்பாகிட்ட சொல்லக்கூடாது’ என்று மகளிடம் கூறியிருக்கிறார் தனலட்சுமி. இது எப்படியோ கணவர் விஜயகுமாருக்குத் தெரிந்துவிட்டது.

ஏற்கெனவே, வேறொரு ஆண் நண்பருடனும் தனலட்சுமி நெருக்கமாக இருந்த விவகாரமும் விஜயகுமாருக்குத் தெரியும் என்பதால், மனைவி தனலட்சுமியின் நடவடிக்கைகள் அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. இந்த நிலையில்தான் விஜயகுமாரின் வீட்டில் இருந்து நேற்றைய தினம் துர்நாற்றம் வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. தனலட்சுமியின் நடமாட்டம் வெளியில் இல்லாததையும், அவரின் கணவர் விஜயகுமாரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாகவும் இருந்ததால் அக்கம், பக்கத்தினர் மேல்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரியப்படுத்தினர்.

பரண்மீது மூட்டைக்கட்டி வைக்கப்பட்ட தனலட்சுமியின் சடலம்

போலீஸார் வந்து வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது, சமையலறை பரண்மீது ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. பரண்மீது சுருட்டி வைக்கப்பட்ட சாக்கு மூட்டையை கீழே இறக்கி பார்த்தபோது, அதில் தனலட்சுமியின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ந்துபோயினர். கைகளின் மணிக்கட்டில் நரம்புகள் அரிவாளால் அறுக்கப்பட்டும், கால்கள் கட்டப்படும் படுகொலைச் செய்யப்பட்டிருந்தார் தனலட்சுமி. முகமும் சிதைந்துபோயிருந்தது.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக தனலட்சுமியின் உடலை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கணவர் விஜயகுமாரையும் கைது செய்திருக்கின்றனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளையும் போலீஸார் கைப்பற்றிய நிலையில், விஜயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க