செய்திகள் :

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன?

post image

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' - இது நேற்று முன்தினம் (ஜூன் 24, 2026) மத்திய வெளியுறவுத் துறை கூறிய ஒரு ஸ்டேட்மென்ட்.

ஆதார் கார்டை எடுத்துக்கொண்டாலுமே, அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்பது அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதே ரூல் தான் பான் கார்டு, வாக்காளர் அட்டைக்கும். என்னது வாக்காளர் அட்டையும் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லையா என்று ஷாக் ஆகாதீர்கள்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

இந்தியர்கள் மட்டுமே வாக்காளர் அட்டை பெற முடியும் என்றாலும், வாக்காளர் அட்டையை முழுமையான குடியுரிமை ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது.

ஆனால், மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் தான் நாம் இதுவரை பல இடங்களில் ப்ரூஃப் ஆக காட்டிக் கொண்டிருக்கிறோம். அவை அனைத்தும் அடையாளம் மற்றும் முகவரிக்கான ப்ரூஃப் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவற்றை குடியுரிமைக்கான ப்ரூஃப்பாக எங்கேயும் காட்ட முடியாது.

அப்போது எது தான் குடியுரிமைக்கான ஆதாரம்?

பிறப்பு சான்றிதழ் - இது மிக மிக முக்கியமானது. ஏனெனில் இது பிறந்த தேதி, பிறந்த இடம் அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும். அதனால், இது முக்கியமான குடியுரிமை சான்றிதழாக கணக்கில் எடுத்துகொள்ளப்படுகிறது.

குடியுரிமை சான்றிதழ் - இது இந்திய அரசால் வழங்கப்படும் நேரடி குடியுரிமை ஆவணம்.

இந்தியா
இந்தியா

Naturalisation சான்றிதழ் - வெளிநாட்டுக் குடியிரிமையில் இருந்து ஒருவர் இந்திய குடியுரிமைக்கு மாறினால் கொடுக்கப்படும் ஆவணம் இது.

பதிவு சான்றிதழ்: குடியுரிமை சட்டத்திற்குக் கீழ், குடியுரிமைக்காக வழங்கப்படும் ஆதாரம் இது.

ஆக, இவற்றை மட்டுமே குடியுரிமைக்கான ஆதாரமாக காட்ட முடியும். இந்தியாவில் குடியுரிமைக்கான ஆதாரம் என்று பிரத்யேகமாக... அனைவருக்குமான எந்த ஆவணமும் இல்லை.

மற்றதையெல்லாம் ஏன் குடியுரிமைக்கான ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது?

வெளிநாட்டினர் கூட ஆதார் கார்டு, பான் கார்டை பெற முடியும். அதனால், அந்த இரண்டையும் குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது.

பாஸ்போர்ட் பெறும் போது, போலி ஆவணங்கள் பிரச்னைகள் இருப்பதால், அதை குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக, பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20-ன் படி, பொது நலத்திற்காக இந்திய அரசு இந்தியர் அல்லாதோருக்கும் பாஸ்போர்ட் வழங்க முடியும்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க