செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சியால் தில்லிக்குப் பேரழிவு: பாஜக தலைவர்!

post image

தலைநகர் தில்லியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மீதான தாக்குதல்களை பாஜக தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஷீஷ் மஹால், ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் பாடம் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கேஜரிவாலை மீண்டும் இன்று தாக்கிப் பேசியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

மாற்றத்துக்காகவும், தில்லியைக் கவனித்துக் கொள்வதற்காகவும் ஆட்சிக்கு வந்தவர் தனது குணத்தையும் நடத்தையையும் மாற்றிக்கொண்டார்.

தில்லி மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரத்தில் மக்கள் அவர்களை கேள்வி கேட்டால் கொந்தளித்துவிடுகிறார். ஆம் ஆத்மி வெளியிடப்பட்ட பாடல் கேஜரிவாலின் ஊழல் மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தில் தயாரான ஷீஷ் மஹால் கதையை விவரிக்கிறது.

முதல்வராக இருந்தபோது வரி செலுத்தும் மக்கள் பணத்தைத் தனிப்பட்ட வசதிக்காக தவறாகப் பயன்படுத்தினார் கேஜரிவால். ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஆடம்பர பொருள்கள் மற்றும் நவீன வசதிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தைச் செலவு செய்தார் என்று அவர் கூறினார். இதை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய வீடு மற்றும் விமானத்திற்கான செலவுகளை மேற்கோள் காட்டி பாஜகவுக்கு ஆம் ஆத்மி பதிலடி கொடுக்கிறது. ஆம் ஆத்மி கட்சியால் தில்லியில் பேரழிவுதான் நிகழும் என்று அவர் கூறினார்.

தில்லி பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் பிப். 8-ம் தேதி எண்ணப்படுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என தில்லியில் முன்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்படத்தக்கது.

தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் வாகனம் மீது தாக்குதல்: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு வைத்துள்ளது. தில்லியில் வருகிற ப... மேலும் பார்க்க

ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள்! ஜோதிடம் கூறுவது என்ன?

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் ஜனவரி 21-ஆம் தேதி நிகழவிருக்கிறது. இது பிப்ரவரி வரை வானில் தெரியும்.பொதுவாக இந்த கிரகங்களின் அணிவகுப்புக்கும், ஜாதகத்துக்கும், ராசிக்காரர... மேலும் பார்க்க

பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு: சஞ்சய் ராய் கூச்சல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.தீர்ப்பை வாசித்தபோது, எப்போதும் போல அப்பாவ... மேலும் பார்க்க

நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி

நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி,... மேலும் பார்க்க

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும்: சிவராஜ் சிங் சௌஹான்

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜகவின் உள்கட்சித் தேர்தல் ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் திட்டங்களை நகலெடுக்கும் பாஜக: பிரியங்கா கக்கர்

தில்லி தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மியின் திட்டங்களை பாஜக நகலெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் குற்றம் சாட்டியுள்ளார்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தலைநகர் தில்லியில... மேலும் பார்க்க