செய்திகள் :

'இது ஒரு தொடக்கம்தான்; இனி நிறைய ஜெயிப்போம்!' - வெற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!

post image

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. இந்திய பெண்கள் அணிக்காக முதல் ஐ.சி.சி கோப்பையை வென்று கொடுத்திருக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் போட்டிக்கு பிறகு ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

Team India
Team India

ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, 'இங்கு கூடியிருக்கும் அத்தனை ரசிகர்களுக்கும் நன்றி. எங்களின் வெற்றி தோல்வி இரண்டின் போதும் உடனிருந்தார்கள். தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றாலும் இந்த அணியால் இதை செய்ய முடியும் என்பது தெரியும்.

அணியின் ஒவ்வொரு வீராங்கனையும் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள். லாராவும் லீஸூம் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது ஷெபாலியை பார்த்தேன். அவர் இன்றைக்கு நன்றாக பேட்டிங் ஆடியிருந்தார். இது அவருடைய நாள் என தோன்றியது. அவருக்கு ஒரு ஓவராவது கொடுக்க வேண்டுமென மனதில் தோன்றியது. நான் அவரிடம் ஒரு ஓவர் போடுகிறாயா என்றேன். அவர் எப்போதும் பந்து வீச தயாராக இருந்தார். ஷெபாலி அணிக்குள் வந்த போதே நீ 2-3 ஓவர்கள் வீச வேண்டியிருக்கும் என்றோம். அணிக்காக 10 ஓவர்களையும் கூட வீசுவேன் என அவர் கூறினார். அவர் எப்போதும் அணிக்காக நிற்கக்கூடியவர்.

Harmanpreet Kaur
Harmanpreet Kaur

மழை பெய்ததால் இன்றைக்கு பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இறுதிப்போட்டியில் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் இருக்கும். அதனால் இந்த ஸ்கோரே போதும் என நினைத்தோம். ஒவ்வொரு உலகக்கோப்பைக்கு பிறகுமே கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமென அதிகம் விவாதிப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சியாளர் அமோல் எங்களுடன் இருக்கிறார். பெரிய தருணங்களின் சிறப்பாக செயல்பட நீங்கள் ஸ்பெசலாக ஒன்றை செய்ய வேண்டும் என்பார். கடந்த 2 ஆண்டுகளாக அணியில் நாங்கள் நிறைய மாற்றங்களை செய்யவில்லை.உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென நினைத்தோம், அதற்காக காத்திருந்தோம், வென்றுவிட்டோம். இது ஒரு தொடக்கம்தான். இப்படி கோப்பைகளை வெற்றி பெறுவதை இனி வழக்கமாக மாற்ற வேண்டும்." என்றார்.

``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா

தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த கபடி போட்டிகளில் காயமடைந்த 8 வீரர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு நம்பிக்கை அளித்து உடல் நலனை விசாரிப்பதற்காக இந்திய மகளிர் ... மேலும் பார்க்க

IPL Retentions : சென்னை அணியில் சாம்சன்; வெளியேறியது யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

IPL Retentions : மீண்டுமொரு சீசனில் தோனி; CSK கூண்டோடு வெளியேற்றப்போகும் வீரர்கள்? - IPL அப்டேட்ஸ்!

ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியுன் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். இதற்கான கெ... மேலும் பார்க்க

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க