செய்திகள் :

'இந்த' கணக்குப் பார்த்து கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யுங்க #CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்

post image

நாள் 2

கிரெடிட் கார்டு குறித்த இன்ட்ரோவை நேற்று பார்த்துவிட்டோம். இன்று கிரெடிட் லிமிட் ப்ளஸ் கிரெடிட் கார்டு எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறார் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.

``வங்கியில் கடன் கேட்கிறீர்கள்... தெரிந்தவரிடம் கைமாத்தாக குறிப்பிட்ட தொகையை கேட்கிறீர்கள். உடனே, கையில் எடுத்து கொடுத்துவிடுவார்களா?

திரும்ப கடனை கொடுத்துவிடுவோமா என்பதை பார்ப்பார்கள் தானே. இதற்கு கிரெடிட் கார்டும் விதிவிலக்கு அல்ல.

வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்
வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்

எத்தனை தடவை போன் செய்து கிரெடிட் கார்டு வாங்க சொல்லி வங்கிகள் கூறினாலும், அதை தருவதற்கு முன்னால் நம்மிடம் சிலவற்றை செக் செய்வார்கள்.

முதலில், வருமானம். கிரெடிட் கார்டு வாங்கினால், அதை சரியாக கட்டிவிடுவது போல, வருமானம் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.

அடுத்ததாக, கிரெடிட் ஸ்கோர். இந்தக் கிரெடிட் ஸ்கோரை நமது நிதி ஜாதகம் என்றே கூறலாம்.

கிரெடிட் ஸ்கோர் கடன் வாங்கியிருக்கிறோமா... எங்கெல்லாம் கடன் வாங்கியிருக்கிறோம்... வாங்கிய கடனை சரியாக அடைத்திருக்கிறோமோ அல்லது சரியாக கட்டி வருகிறோமா என்பதை காட்டிவிடும்.

ஆக, இந்த இரண்டையும் பொறுத்து, நமக்கு கிரெடிட் கார்டு கொடுக்கலாமா... கொடுத்தால், எத்தனை கிரெடிட் லிமிட் தரலாம் என்பதை நிர்ணயிப்பார்கள்.

கிரெடிட் லிமிட் என்றால், கிரெடிட் கார்டு வாங்கியதும் எத்தனை ரூபாய்க்கு வேண்டுமானாலும், அதை ஸ்வைப் செய்துவிட முடியாது.

வங்கிகள் வருமானம், கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து ஒரு கிரெடிட் லிமிட் செட் செய்திருக்கும். அதாவது வங்கிக் கணக்கில் பணம் இருப்பது போல.

அந்தக் கிரெடிட் லிமிட்டைத் தாண்டி ஒரு பைசாவிற்குக் கூட கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்ய முடியாது.

இது தான் கிரெடிட் லிமிட்.

Credit Card | கிரெடிட் கார்டு
Credit Card - கிரெடிட் கார்டு

இப்போது கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்தப் பின்னர் நடப்பதைப் பார்ப்போம்.

நேற்றே சொல்லியிருந்தோம்... கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்தால், நீங்கள் கட்ட வேண்டிய தொகை யாருக்குச் செல்ல வேண்டுமோ, அவருக்குச் சென்றுவிடும் என்று.

அப்படி செலுத்திய கடனை திரும்ப செலுத்த வேண்டுமல்லவா?

நீங்கள் ஒரு மாதத்தில் எங்கெல்லாம், எத்தனை ரூபாயிற்கு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்திருக்கிறீர்கள் என்கிற ஸ்டேட்மென்ட் உங்கள் மெயில் அல்லது ஆப்பில் 'டான்' என ஆஜராகிவிடும்.

அதை வைத்து நீங்கள் அந்தக் கடனை திரும்ப செலுத்திவிட வேண்டியது தான்.

ஆனால், இங்கே இரண்டு செக்குகள் உண்டு.

> ஒரு மாதம் முழுவதும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்த தொகையை முழுவதுமாக செட்டில் செய்துவிட்டால், 'நோ' வட்டி.

மினிமம் டியூ தொகை தான் கட்டுகிறீர்கள் என்றால், மீதியிருக்கும் தொகைக்கு பரிவர்த்தனை செய்த நாளில் இருந்து கணக்கிட்டு வட்டி வசூலிக்கப்படும்.

> முழுமையாக கடனைச் செட்டில் செய்தாலும், அடுத்த பில்லிங் டியூ டேட்டிற்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றாலும், வட்டி, லேட் பேமென்ட் ஃபீஸ் என சேர்த்து செலுத்த வேண்டும்.

இந்த வட்டியும், ஃபீஸும் தான் கிரெடிட் கார்டில் சிலந்தி வலை. இதில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பதே புத்திசாலித்தனம்.

Credit Card | கிரெடிட் கார்டு
Credit Card | கிரெடிட் கார்டு

முடிந்தளவு எத்தனை ரூபாய் கிரெடிட் கார்டில் செலவளித்திருக்கிறீர்களோ, அத்தனை தொகையையும் டியூ டேட்டில் கட்டிவிடுவது நல்லது.

இல்லையென்றால், அதிக வட்டியைச் சந்திக்க நேரிடும்.

ஒரு மாதத்தில் எத்தனை ரூபாய் நம்மால் கட்ட முடியும் என்று தோராயமாக நமக்கே தெரியும். அதனால், அந்தக் கணக்கைத் தாண்டி, கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்து சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் மக்கா."

நாளை சந்திப்போம்...

NRI Corner: NRE & NRO கணக்கு - என்ன வித்தியாசம்? எதற்கு எது பெஸ்ட்?

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு விஷயத்தில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். NRE, NRO இந்த இரண்டு கணக்குகளுக்கு என்ன வித்தியாசம், எதற்கு எந்தக் கணக்கைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்க... மேலும் பார்க்க

சந்தை இறக்கம்: மொத்த முதலீட்டை (Lumpsum) புத்திசாலித்தனமாகச் செய்யும் STP பற்றி தெரியுமா?

பங்குச் சந்தை திடீரென இறங்கும் போது, பல முதலீட்டாளர்கள் பயந்துபோய்விடுவார்கள். “இப்போ முதலீடு பண்ணலாமா, வேண்டாமா?'' என்ற குழப்பம் அவர்களுக்கு வருவது மிக மிக இயல்பான விஷயம்.ஆனால், அனுபவம் வாய்ந்தவர்கள்... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்கும் TVS நிறுவனம்!

தமிழகத்தின் தலைசிறந்த கார்ப்பரேட் நிறுவனமான டி.வி.எஸ், மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்குகிறது. பிஜிம் (PGIM) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் களம் இறங்கத் ... மேலும் பார்க்க

25 வயதில் உங்கள் மகன், மகளுக்கு ரூ.1 கோடியைச் சேர்க்கும் எளிய வழியைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

இன்றைக்கு 30, 35 வயதில் இருக்கும் பலரிடம் ரூ.1 கோடி பணம் இருக்குமா என்று கேட்டால், இருக்காது. அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு அல்லது மனை இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவைப்படும்போது ஏதோ ஒரு முதலீட... மேலும் பார்க்க

புதிய ஃபைனான்ஷியல் இயர்... உங்கள் வாழ்க்கை மாற இந்த 5 விஷயங்களை செய்யுங்க!

நாளை முதல் 2026-27-ஆம் நிதி ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த புதிய நிதி ஆண்டு தினத்தை மற்றுமொரு நாளாக நாம் நினைத்துவிடக் கூடாது. காரணம், அடுத்த நிதி ஆண்டை நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில... மேலும் பார்க்க

இன்றைக்கு ஒரு மாத வீட்டுச் செலவு ரூ.50,000... 10 ஆண்டுக்கு பிறகு ரூ.89,542 தேவை - எப்படி தெரியுமா?

இன்றைக்கும் பலரும் புரிந்துகொள்ளாத விஷயமாகத்தான் இருக்கிறது, பணவீக்கம் எனப்படும் விலைவாசி உயர்வு. இதனால் நம் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பானது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருவதை நம்மில் பலரும் புரிந... மேலும் பார்க்க