செய்திகள் :

"இனி யார் என்னை அம்மானு கூப்டுவா?" - போனில் பேசிய படி கார் ஓட்டிய பெண்ணால் பலியான 8 வயது சிறுவன்

post image

மும்பை பாந்த்ரா பகுதி எப்போதும் பிஸியாக இருக்கும். இங்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பாந்த்ரா மேற்கில் உள்ள ஜிஜமாதா கார்டனுக்கு அருகிலுள்ள செயின்ட் ஜான் பாப்டிஸ்ட் சாலையில் அன்ஷ் குப்தா என்ற 8 வயது சிறுவன் சாலையைக் கடக்க முயன்றான்.

அப்போது 45 வயதான ஊட்டச்சத்து நிபுணர் மேகா ராவல் தனது மொபைல் போனில் பேசிய படி காரை வேகமாக ஓட்டி வந்தார். அந்தக் கார் சிறுவன் குப்தா மீது மோதி அவன் மீது ஏறி இறங்கியது.

உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த சிறுவனை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிறுவனைச் சோதித்தபோது அவன் ஏற்கனவே இறந்திருந்தான். பாந்த்ரா அருகில் உள்ள கடேஷ்வர் பகுதியில் வசித்து வந்த அன்ஷ், விளையாடுவதற்காக கார்டனுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவன் வீடு திரும்பும்போது சாலையைக் கடக்கும்போது ராவல் ஓட்டிச் சென்ற இன்னோவா ஹைக்ராஸ் எஸ்யூவி மோதியது.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ''விபத்தை ஏற்படுத்தியவுடன் அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். உடனே விபத்தை ஏற்படுத்திய கார் சிறிது தூரத்தில் நின்றது.

ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் காயமடைந்த சிறுவனை பாந்த்ராவில் உள்ள ஹோலி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்'' என்றார்.

பாந்த்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். விபத்தை ஏற்படுத்திய ராவல் கைது செய்யப்பட்டார். தங்களது ஒரே மகனை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. உறவினர்கள் அவர்களை ஆறுதல்படுத்த முயற்சித்தனர். பெற்றோர் அழுது கொண்டிருந்த வீடியோ ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது.

துக்கம் மற்றும் கண்ணீருடன் பேசிய பெற்றோர், "இனி எங்களை அப்பா என்றும் அம்மா என்றும் யார் அழைப்பார்கள்? எங்களுக்கு நீதி வேண்டும், என் குழந்தை சாலையோரம் நடந்து கொண்டிருந்தபோது, ​​​​கார் மோதி இறந்தான்," என்று கூறினர்.

அன்ஷின் தந்தை அர்விந்த் குப்தா இது குறித்து கூறுகையில், ''எங்களது மகன் இழப்பால் நாங்கள் நிலைகுலைந்து போய் இருக்கிறோம். என் மகன் அன்ஷுக்கு நடந்ததற்கு எனக்கு நீதி வேண்டும். அவன் எங்களது ஒரே குழந்தை. அவன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளான். நான் என்ன செய்வது? எனக்கு நீதி வேண்டும்''என்று கூறினார்.

நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன?

நெல்லை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலெட்சுமி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட... மேலும் பார்க்க

லிப்ட் கேட்ட 16 வயது மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நள்ளிரவில் ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம்

டெல்லி காஷ்மேரா கேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது பெண் ஒருவர் அந்த வழியாக வந்த பஸ் ஒன்றை மறித்து லிப்ட் கேட்டார். நொய்டாவிற்குச் செல்லுமா என்று அப்பெண் கேட்டார். பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ் நொய... மேலும் பார்க்க

மதுரை: 'என் அம்மா ஏன் கைகட்டி நிற்க வேண்டும்'- மாணவி தற்கொலை; தலைமையாசிரியை மீது SC/ST Act-ல் வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில... மேலும் பார்க்க

`கஞ்சா நெட்வொர்க்' - ஒடிசாவுக்கே சென்று முக்கிய குற்றவாளியைத் தட்டித்தூக்கிய வேலூர் போலீஸ்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சிக்கிய இருவரிடம் வேலூர் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா சிக்கியது. விச... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: கஞ்சா வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய பெண்; குண்டர் சட்டத்தைப் பிரயோகித்த கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் 'Drug Offender' பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா (ஃபைல் படம்)கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க