செய்திகள் :

இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?

post image

இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஏன் இந்த வரி?

உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை உள்ளது. அமெரிக்கப் பொருள்களுக்கு பிற நாடுகள் அதிக வரிகளை விதிக்கிறது என்று ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வரிகளை ட்ரம்ப் ‘தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977’-க்கு கீழ் தான் நடைமுறைக்கு கொண்டார்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

அதன் பிறகு, இந்த வரிகளின் அமலுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கால அவகாசத்தில் உலக நாடுகள் கட கடவென வர்த்தக ஒப்பந்தங்களைப் பேசி முடித்தது. இதனால், ஒப்பந்தங்கள் முடிந்த நாடுகளுக்கு ட்ரம்ப் வரிகளை குறைத்தார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இன்னொரு பக்கம், இந்த வரி உலக நாடுகள் எப்படி பாதிக்கிறதோ, அமெரிக்க மக்களும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

வழக்கு

இதனையடுத்து, இந்த வரிகளை எதிர்த்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், "தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது" என்று தீர்ப்பு வழங்கினர்.

இதை எதிர்த்து தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப்.

இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை உலகம் உற்றுநோக்கி வருகிறது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்
அமெரிக்க உச்ச நீதிமன்றம்

அமெரிக்க அரசாங்கம் தயார்

ஒருவேளை, இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டியதாக இருக்கும்.

இதை தவிர்க்க, இந்த வரிகளை அமெரிக்காவிற்குள்ளேயே வைத்துக்கொள்ள பிற வரிச் சட்டங்களை தயார் செய்து வருவதாகவும், கையிலெடுக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ், வரி விதிக்க முடியாது என்றாலும், ட்ரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்குமாம். அதற்கான நடைமுறைகளையும் தயார் செய்துவிட்டது.

ஆக, தயாராக இருங்கள், உலக நாடுகளே!

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க