'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் ...
"இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!"- சரத்குமார்
'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார்.
கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வரும் 27 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'ஆழி' படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சில தினங்ளுக்கு முன் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், " 'ஆழி' ஒரு வித்தியாசமானத் திரைப்படம்.
இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் ஆடல், பாடல், பிரமாண்டங்கள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான பிரமாண்டங்கள் இருக்காது.
கதை தான் இந்தப் படத்தின் பிரமாண்டமே. இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.

ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்ஸுக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா, டிவிக்கு நடிப்பதா, ஓடிடிக்கு நடிப்பதா, தியேட்டருக்கு நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது.
இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.


















