செய்திகள் :

"இறந்தாலும் எங்களுடன்தான் இருக்கவேண்டும்" - புதைத்த நாயை நள்ளிரவில் தோண்டி எடுத்து வந்த ஷாருக்கான்

post image

பாலிவுட் நடிகர்கள் அனைவருமே நாய்கள் மீது அதிக பாசம் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு நடிகரும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருக்கின்றனர். நடிகர் ஷாருக்கானிடம் முதலில் 4 நாய்கள் இருந்தன. அவற்றின் மீது ஷாருக்கான் உணர்வுபூர்மாக அதிக பாசம் வைத்திருந்தார்.

இது குறித்த ஒரு சம்பவத்தை ஷாருக்கானின் மனைவி கெளரியின் மாமா வெளியிட்டுள்ளார். கெளரியின் தாய்மாமன் இந்தப் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், நான் கெளரிக்கு ஒரு சீன நாய் ஒன்றைக் கொடுத்து இருந்தேன். அந்த நாய் மீது ஷாருக்கானும் அதிக அன்பு வைத்திருந்தார். ஒரு முறை ஷாருக்கான் படப்பிடிப்புக்குச் சென்று இருந்தார்.

அந்நேரம் அந்த நாய் ஏதோ பிரச்னையில் இறந்துவிட்டது. வீட்டில் இருந்த ஊழியர்கள் நாயை நன்றாக ஒரு துணியில் சுற்றி அருகில் இருந்த கடற்கரையில் மணல் தோண்டி புதைத்துவிட்டு வந்துவிட்டனர்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

ஷாருக்கான் நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார். வந்தவுடன் நாயை எங்கே என்று கேட்டார். உடனே ஊழியர்கள், அது நம்மை விட்டுபோய்விட்டது என்று தெரிவித்தனர். இப்போது எங்கே என்று ஷாருக்கான் கேட்டதற்கு கடற்கரையில் மணல் தோண்டி புதைத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதிகாலை 2.30 மணிக்கு உறங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி எங்கே புதைத்தீர்கள் என்று காட்டுங்கள் என்று கூறி அவர்களை கடற்கரைக்கு அழைத்துச்சென்றார். ஊழியர்கள் நாய் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டியதும் ஷாருக்கானே அந்த இடத்தைத் தோண்டி நாயை வெளியில் எடுத்தார்.

நாயை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டிற்குப் பின்புறம் அதனைப் புதைத்தார். அதோடு அந்த இடத்தில் ஒரு அடையாளத்தையும் வைத்தார். இறந்த நாயைப் பார்த்து ஷாருக்கான் அழுதார். எனது நாயை எப்படி தூக்கி எறிய உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? அவன் இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் எங்களுடன் தான் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

கெளரி கானும் அந்த நாயுடன் ஷாருக்கான் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாய் இறந்தபோது ஷாருக்கான் தனது துயரத்தை வெளிப்படுத்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஷாருக்கான் இப்போது கிங் படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அதன் படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்று இருந்தார்.

"உயரத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்; ஆனால் சல்மான் கான் மட்டுமே..." - 'ஆசை' பட நடிகை பூஜா பத்ரா

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பூஜா பத்ரா, அஜித் நடித்த ஆசை படத்தில் படத்தில்தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் ப... மேலும் பார்க்க

Cannes 2026: இரண்டாவது முறையாக ஆலியா பட்; ஆனால், கண்டுகொள்ளாத போட்டோகிராபர்ஸ்! - வைரலாகும் வீடியோ

பிரான்ஸில், 79-வது கான் திரைப்பட விழா நேற்றைய தினம் தொடங்கியது. பாலிவுட் நடிகை ஆலியா பட் இரண்டாவது முறையாக, இந்தாண்டும் கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்த... மேலும் பார்க்க

"படம் ஹிட் ஆகும் என நம்பிக்கையாக இருந்தோம்; ஆனால், ஓடாததற்கு..." - ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான்!

ஆமிர் கானின் மகனான ஜூனைத் கான் நடித்திருந்த 'ஏக் தின்' திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதான் சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம... மேலும் பார்க்க

"Raja Shivaji படத்தில் நடிக்க நான், அமிதாப், சல்மான் சம்பளம் வாங்கவில்லை" - ரிதேஷ் நெகிழ்ச்சி

மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜா சிவாஜி என்ற பெயரில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் புதிய படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்து வெ... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத்தில் பாலிவுட்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் படம்... மேலும் பார்க்க

"3 வேளையும் பார்லே-ஜி பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கிறேன்" - நவாசுதீன் சித்திக்

'கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் 'ரேடியோ நாஷா' இதழுக்கு அளித்த பேட... மேலும் பார்க்க