செய்திகள் :

ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது' - பெண் ஊழியர்கள் போராட்டம்!

post image

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே 'BAPS' (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்றனர்.

அப்போது, அக்குழுவினர் செல்லும் பாதைகளில் பெண் ஊழியர்கள் யாரும் பணியில் இருக்கக் கூடாது என்றும், அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஈபிள் கோபுர நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண் ஊழியர்கள் போராட்டம்
பெண் ஊழியர்கள் போராட்டம்

இதன் அடிப்படையில் பெண் ஊழியர்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதி டயான் டாவோய்ன் குற்றம்சாட்டியுள்ளார். பாலின பாகுபாட்டை வெளிப்படுத்தும் இந்தச் சம்பவத்திற்குப் பிரான்ஸ் நாட்டின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரெஞ்சு தேசிய சட்டமன்றத் தலைவர் யேல் பிரவுன்-பிவெட் தனது எக்ஸ் பக்கத்தில், ``வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காகப் பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விருந்தினர்களை வரவேற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் சமத்துவ மதிப்பீடுகளை விட்டுக்கொடுக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் துணை மேயர் இம்மானுவேல் கிரிகோயர், ``ஊழியர்களின் கோபம் நியாயமானது. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

ஈபிள் கோபுரத்தைச் நிர்வகிக்கும் 'SETE' நிறுவனத்தின் தலைவர் ஆரியல் வேல் மற்றும் நிர்வாகத்தினர் கூறுகையில், ``பார்வையாளர்கள் தரப்பில் பெண்களுடனான தொடர்பைக் குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது உண்மைதான். அத்தகைய நிபந்தனைகளை ஏற்றிருக்கக் கூடாது." எனத் தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்பு கோரினர்.

BAPS அமைப்பு
BAPS அமைப்பு

இந்த சம்பவம் குறித்து பேசிய BAPS அமைப்பு, ``பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஈபிள் கோபுர நிர்வாகத்துடன் ஆலோசித்து அதிகாலை நேரத்தில் பார்வையிட்டோம். யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தங்களுக்குத் தெரியாது. இந்தச் சர்ச்சையால் மனவேதனை அடைந்தவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்." என்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான ஊழியர்களின் போராட்டத்தில், ஈபிள் கோபுரம் திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

``எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" - இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்... மேலும் பார்க்க

Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் வருமானம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்!

சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao - 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க... மேலும் பார்க்க

I’m Game: `அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடை' - கயாடு லோஹர் குறித்து துல்கர் சல்மான்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர... மேலும் பார்க்க

மகள்களின் கல்விக் கனவு: `ரூ.3000 பரிசுக்காக ஒரு தாயின் செருப்பில்லா மாரத்தான்' - நெகிழ்ச்சி வீடியோ

குழந்தைகளின் கல்விக்காக ஓடிய தாயின் தீவிரம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகாயைச் சேர்ந்தவர் ராமபாய் ரன்வீர் (47). கணவன்... மேலும் பார்க்க

``ஒரு நடிகராக சக நடிகருக்குச் சொல்கிறேன்.! " - நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ

கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ‘கர்நாடகா வித்யாவர்தகா சங்க’ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ‘மனுஷ்யத்வதெடகே சமுதாயா’ சார்பில் சமூக மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

காதலியின் 3,400 முத்தங்களால் விபரீதம்: வைரலான வீடியோ; காரைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகார்வார். இன்ஸ்டாகிராமில் பிரபலமடைவதற்காக, தனது சுவிஃப்ட் காரை வித்தியாசமான முறையில் மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருடைய பெண் தோழி ஒருவர் ச... மேலும் பார்க்க