செய்திகள் :

ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம்

post image

அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின், அவ்வப்போது தாக்குதல் நடந்தாலும், தற்போது முழு நேர போர் தொடங்கியுள்ளது.

துருக்கியில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் முடிந்துவிட்டது' என்று கூறியிருந்தார்.

அதன் பின், இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்தன.

இந்த நேரத்தில் ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடுகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தின் அமெரிக்காவின் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப், "நேற்று ஈரான் நடத்திய கப்பல் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஈரானின் தென்கிழக்கு நகரமான இரான்ஷாரில் உள்ள 'இரான்ஷார் விமான நிலையம்/விமானப்படைத் தளத்தை' இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உள்ளூர் அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தளத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் பிரிவு (IRGC-AF) ஓரளவுக்குப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது" என்கிற பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் ராணுவ பிரிவுகளில் ஒன்றான மத்தியக் கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்...

"அமெரிக்கப் படைகளின் தலைமைத் தளபதியின் (அதிபர்) உத்தரவின் பேரில், ஹார்முஸ் நீர்ச்சந்தி சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் ராணுவத் திறனை மேலும் முடக்குவதற்காக, அமெரிக்க மத்தியக் கட்டளையகப் படைகள் ஈரான் மீது கூடுதல் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளன.

முக்கிய சர்வதேச நீர்வழித்தடத்தில் எவ்வித தடையுமின்றிச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அதன் சிவிலியன் ஊழியர்கள் மீது அண்மையில் ஈரான் நடத்திய தேவையற்ற ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு, அமெரிக்கா, ஈரானை முழுப் பொறுப்பேற்கச் செய்து வருகிறது" என்று தாக்குதலுக்கான காரணத்தை விளக்கியுள்ளது.

'காவல்துறை பாஜக தொண்டர்களைப் போல.!' - சொந்த கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?

நேற்று (ஜூலை 8, 2026), மேற்கு வங்கம் பாருய்பூரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திரிணாமும் காங்கிரஸ் பேரணி நடத்தியது. அந்தப் போராட்டத்தைத் தடுக்... மேலும் பார்க்க

கரூர் விசிட் : 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் சென்றிருந்தார். அப்போது அதிகளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

"நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் திருப்பி அடி விழும்" - அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. ஈரானின் சபஹார் துறைமுகம், இரான்ஷார் விமான நிலையம் எனத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கெல்லாம் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது... மேலும் பார்க்க

30 ஆண்டுகளில் 325 மில்லியன் டாலர் லஞ்சம்: சீனாவில் முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

சீனாவில் லஞ்சம் பெற்ற முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, அந்த நாட்டு நீதிமன்றம்.நான்ஜிங் நகரின் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் முன்னாள் துணை இயக்குநர் யாங் யூலின். இவர் 1993-... மேலும் பார்க்க

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்; கொப்பரை, தோட்டாபுரி மாம்பழம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கொப்பரை தேங்காய் மற்றும் தோட்டாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் ... மேலும் பார்க்க